ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கடற் புதல்வி நீ !
ஆரிகானோவின் சொந்தக்காரி !
நீச்சல் குமரி நீ !
மேனி நீர் போல் தூயது !
சமையல்காரி நீ !
உன் குருதி விரையும்
மணல் போல்.
புரியும் வினைகளில் எல்லாம்
பூக்கள் பொழியும் !
பூமி வாசனை வழியும் !
++++++++++
கடலை நோக்கிப் போகும்
உன் கண்கள் !
குப்பென எழும்பும்
அப்போது பேரலைகள் !
நிலத்தை நோக்கி நீளும்
உன் கைகள் !
பொங்கி முளைத்தெழும்
அப்போது விதைகள் !
உன்னுள் கலந்த
களி மண்ணைப் போல்
பூமியின் வளமையும்
நீரின் முதன்மையும் ஆழ்ந்து
நீ அறிவாய் !
+++++++++++
நாடியா !
வெட்டிக் கூறுபோடு
உன் உடலை !
அத்துண்டங்கள் புத்துயிர்
பெற்றெழும்
சமையல் அறையில் !
அதுபோல் தான்
நீ வாழும்
எதுவு மாக மாறுவாய் !
++++++++++++
தூங்கு நீ ஆதலால்
துயர்களைத் தீர்க்கும்,
எனது கைகள்
உனைக் கட்டி அணைப்பதிலே !
ஓய்வெ டுப்பாய் நீ
அப்போது !
காய் கறிகள் கடல் விதைகள்
மூலிகைகள்,
உனது கனவு
நுரைகள் !
++++++++++++++
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 13, 2009)]
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- முள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)
- ‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு
- அறிவியலும் அரையவியலும் – 3
- கடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 2
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 1
- சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு ! (கட்டுரை: 65)
- தினம் தினம் தீபாவளி
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்
- ‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா
- குயிலோசை
- நண்பனின் காதலி
- கையசைப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>
- யதார்த்தங்கள்
- மழைக்காலங்களில்…
- நிலாச்சோறு!
- காதல் சாத்தானின் முகவரி
- அறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்
- முள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3
- அன்பு மகள்
- அன்பு மகள் (தொடர்ச்சி)
- விருதுகளும் அதன் அரசியலும்
- புகழ் எனும் போதை
- வஹி பற்றிய வாசிப்பின் அரசியல்
- பாரதிதாசனின் கல்விச் சிந்தனைகள்
- பனித்துளிகள்
- படுக்கை குறிப்புகள் – 1
- பதட்டம்
- தீபாவளி 2009
- காவல் நாகம்
- வேத வனம் விருட்சம் -55
- கனவுகள் சுமக்கும் கருவறை
- …கதைசொல்லும் தீபாவளி