மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Kahlil Gibran Paintings
The Jail Birds
“பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மாவே. அந்த மகத்தான கடவுள் பேரன்பையும் நன்னெறியையும் உபதேசிக்கிறது. ஆனால் மக்கள் அப்போதனைகளைக் கேலி செய்கிறார். நாஸரத் ஏசு நாதர் அவற்றை ஏற்றார். அதற்காக அவர் சிலுவையில் அறையப் பட்டதே அவருக்கு வெகுமதி. சாக்ரடிஸ் அக்குரலைக் கேட்டார். அவரும் பலியானார். ஏசுவையும், சாக்ரடிஸையும் பின்பற்றி வருகிறார் எண்ணற்ற அவரது சீடர்கள்.”
கலில் கிப்ரான்
ஜெரூஸலம் ஏசு பெருமானைக் கொல்ல முடியாது. அதுபோல் ஏதென்ஸ் சாக்ரடிஸை அழிக்க இயலாது. அவர் இருவரும் இன்னும் வாழ்கிறார். எப்போதும் அவர் அழியாமல் நீடு வாழ்வார். பின்பற்றுவோரைக் கேலி செய்வது வெற்றி அளிக்காது. சீடர்களும் வாழ்வார்; எப்போதும் பெருகுவார்.
கலில் கிப்ரான்
+++++++++
<< நேற்றைய கூக்குரல் >>
கவிதை -17
நேற்று நான்
ஆடு மேய்த்தேன்
பச்சைப் புல்வெளி
மலைச் சரிவுகளில்
புல்லாங் குழல் வாசித்து
சல்லாபமாய்
தலை நிமிர்ந்து கொண்டு !
+++++++++++++
இன்று நான் பேராசைச்
சிறையிலே
சிக்கிக் கொண்டு
பொன் மேல் பொன் திரட்டி
போராட் டத்தில்
உழன்று
ஆறாத் துயரில்
அழுத்தப் பட்டேன்
இறுதியில் !
+++++++++++++
நேற்று நானோர்
பாடும் குயில் பறவை
சுதந்திரமாய்
மேல் நோக்கி உயரும்
கீழ் நோக்கி
அங்கும் இங்கும்
தங்கும் நிலத்தில் !
++++++++++++
இன்று நானோர் அடிமை
நிலையற்ற
செல்வத்தின் மீது
சமூகத்தின்
சட்ட திட்டத்தின் மீது
நகரத்தின்
பழக்க வழக்கத்தின் மீது
விலைக்கு வாங்கிய
நண்பரின் மீது
குறுகிய
விநோத விதிகளுக்கு
உட்பட்டு
மக்களை மகிழ்விப்பேன் !
++++++++++
சுதந்திரமாய் வாழத்தான்
பிறந்தேன் !
வாழ்வுக் கொடையில்
மூழ்கிப்
பூரிப்படைந்தேன் !
ஆனால்
நானின்று
என் முதுகை முறிக்கும்
பொன் பொதி சுமக்கும் ஓர்
மிருகமாய்
இருக்கிறேன் !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 13, 2009)]
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- முள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)
- ‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு
- அறிவியலும் அரையவியலும் – 3
- கடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 2
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 1
- சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு ! (கட்டுரை: 65)
- தினம் தினம் தீபாவளி
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்
- ‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா
- குயிலோசை
- நண்பனின் காதலி
- கையசைப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>
- யதார்த்தங்கள்
- மழைக்காலங்களில்…
- நிலாச்சோறு!
- காதல் சாத்தானின் முகவரி
- அறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்
- முள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3
- அன்பு மகள்
- அன்பு மகள் (தொடர்ச்சி)
- விருதுகளும் அதன் அரசியலும்
- புகழ் எனும் போதை
- வஹி பற்றிய வாசிப்பின் அரசியல்
- பாரதிதாசனின் கல்விச் சிந்தனைகள்
- பனித்துளிகள்
- படுக்கை குறிப்புகள் – 1
- பதட்டம்
- தீபாவளி 2009
- காவல் நாகம்
- வேத வனம் விருட்சம் -55
- கனவுகள் சுமக்கும் கருவறை
- …கதைசொல்லும் தீபாவளி