ஹெச்.ஜி.ரசூல்
ஒரு துளி சந்தோசத்தின் சிறகுதிர்த்த
நிலவொளியின் சாயல் பதிந்த உருவம்
எதையெதையோ தினம் சொல்லும்
மாயக் கனவின் விளிம்போரம் துளிர்த்த
மழைச் சாரல் சிதறல் தவம் கலைக்கும்.
யானைப்படை குதிரைப் படைகளென
குளம்படிசப்தங்களில் சிதைந்துபோன
வரலாறின் நெடுநாளைய வரிகளெங்கும்
கசங்கிய மனங்களின் கருகல்வாசம்
மழையும் மண்ணும் கதிர்மணிகளும்
நட்சத்திரங்களோடு கண்சிமிட்டிப் பேச
விசித்திரம் விரிந்து முத்தமிடும்.
உடைபடா மெளனம் சூடிய சொற்கள்
குழந்தையின் புழுதிபடர்ந்த உடலாகி
மண்ணில் உருண்டு புரண்டெழும்
வெற்றுப் பாளைகளிலும் பூத்து ஒளிந்திருக்கும்
கமுகம் பூக்கள்
கிணற்றோரங்களில் கிழிபட்டு
கயிற்றின் முடிச்சுகளில் தொங்கி
நீரிறைக்கும் பட்டைகளின்
சின்ன சின்ன தியாகங்களை
காற்றில் எழுதிச் செல்லும்.
குஞ்சுப் புறாக்களுக்கு சிறகு பொருத்தி
அழகுபார்த்த தாய்ப் பறவையின் மடியில்
ஒரு கூட்டம் புறாக்கள்.
ரோஜா பிச்சி முல்லைகளை முகர்ந்து பார்க்க
மீண்டும் கூடும் பரவசம்
சாயங்கால அறைகளில் இனி நாளையும்
மூக்கு வியர்க்கவும் இமைமயங்கவும்
திரும்பத் திரும்ப பேசவேண்டும்
mylanchirazool@yahoo.co.in
- இது(ரு) வேறு வாழ்க்கை
- 15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
- மலேசியாவின் கலை இலக்கிய இதழ் ‘வல்லினம்’.
- தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா
- வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்
- பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
- சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
- நினைவுகளின் தடத்தில் – (35)
- பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும் -2
- உயிரின் துடிப்பு
- தனிமையிலிருந்து தப்பித்தல்
- உள்வெளிப்பயணங்கள்
- வேத வனம் விருட்சம் 54
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>
- தொடரும்
- என் வரையில்…
- உன்னைப்போல் ஒருவன்
- நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்
- குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009
- அடைக்கலப் பாம்புகள்
- ஆகு பெயர்
- அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி
- நினைவுகளின் பிடியில் ..
- மழைச்சாரல்…..
- தெய்வம் நீ என்றுணர்
- ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
- அந்த ஏழுகுண்டுகள்…..(1)
- தினேசுவரி கவிதைகள்
- தொடர்பில்லாதவை
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)
- பாத்திரத் தேர்வு
- சேரா துணை..
- சாயங்கால அறை
- புரிய இயலாத உனது அந்தரங்கம்
- சுழற்றி போட்ட சோழிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2
- படம்