கு.முனியசாமி
சுருள்மிகு கூந்தல்
சிலவெண் இழைகள்
பிறையிணை நெற்றி
வில்லென புருவம்
சிறுசிறு விழிகள்
உயிரின் வெளிச்சம்
வளைந்த இதழ்கள்
தேனின் எச்சம்
சங்கென கழுத்து
சாய்ந்திட இரண்டு
மாங்கனி மிஞ்சும்
மன்மதக் கலசம்
கண்ணம் உரசும்
கவிதை பிறக்கும்
கைகள் தழுவும்
அமிழ்தம் சுரக்கும்
இடையின் ஏழ்மை
கொடியின் மேன்மை
தடைகள் கடந்து
தழுவும் ஆண்மை
எல்லாம் அழகு
இறைவன் லீலை
கவிஞர் பாடும்
காதற் சோலை
சொர்க்கம் என்பதை
சொல்லி அழைக்கும்
சுவைகள் ஆயிரம்
சொல்லாமல் சொல்லும்
காவி மனதிலும்
காதல் உயிர்க்கும்
மன்மத வேள்விகள்
மனதை உருக்கும்
உயிர்கள் மயங்கும்
உலகம் சிலிர்க்கும்
உறங்கும் உயிரும்
உருகி விழிக்கும்
மனதின் ஆசை
நினைவே இனிக்கும்
உயிரின் தேடல்
உறவில் உயிர்க்கும்
நடக்கும் நடக்கும்
நல்லது நடக்கும்
நாளை என்பது
நமக்காய் பிறக்கும் …
gmunis@rediffmail.com
- இது(ரு) வேறு வாழ்க்கை
- 15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
- மலேசியாவின் கலை இலக்கிய இதழ் ‘வல்லினம்’.
- தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா
- வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்
- பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
- சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
- நினைவுகளின் தடத்தில் – (35)
- பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும் -2
- உயிரின் துடிப்பு
- தனிமையிலிருந்து தப்பித்தல்
- உள்வெளிப்பயணங்கள்
- வேத வனம் விருட்சம் 54
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>
- தொடரும்
- என் வரையில்…
- உன்னைப்போல் ஒருவன்
- நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்
- குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009
- அடைக்கலப் பாம்புகள்
- ஆகு பெயர்
- அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி
- நினைவுகளின் பிடியில் ..
- மழைச்சாரல்…..
- தெய்வம் நீ என்றுணர்
- ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
- அந்த ஏழுகுண்டுகள்…..(1)
- தினேசுவரி கவிதைகள்
- தொடர்பில்லாதவை
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)
- பாத்திரத் தேர்வு
- சேரா துணை..
- சாயங்கால அறை
- புரிய இயலாத உனது அந்தரங்கம்
- சுழற்றி போட்ட சோழிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2
- படம்