ப.மதியழகன்,
வான்வெளியில் மேகங்களின்
அணிவகுப்பைப் போன்றது
மனதில் நினைவலைகள்
உற்றுப் பார்த்தால்
வெவ்வேறு உருவங்கள் புலப்படலாம்
அம்முகில் கூட்டங்களில்
கடிவாளமில்லாத புரவியென
ஐம்புலன்கள், திசைக்கொன்றாய்
மானிடனை இழுத்துச் சென்று
சகதியில் அவனை விழவைத்து
சுற்றத்தார் கைகொட்டிச் சிரிப்பதை
சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும்
மனப்பரப்பில் எரியும்
ஆசையெனும் வேள்வித்தீயில்
ஆகுதியாகும்
விட்டில் பூச்சியைப் போல்
மனித உடல்கள்
காலைக் கதிரொளி
பனிப்போர்வையை விலக்கியது
பறவைகள் ‘கீச்’சென்று சத்தமிட்டு
சிறகடித்துப் பறந்தன
மாலையில வாடிப்போய்விடுமோமென்று
வருத்தம் கொள்ளாமல்
மலர்கள் மலர்ந்து நின்றன
தென்றலின் பாடலை
மரங்கள் தலையசைத்து
ரசித்தன
தான் கரையில் ஒதுக்கிய கிளிஞ்சல்களை
வந்து பொறுக்கும் அரும்புகளைக் காண
கடலலை காத்திருந்தது
வைகறை மெளனத்தில் கீதம் பாட
தேவக்குயில் ஓடோடி வந்துவிட்டது
கருமேகத்தில் குமரக்கடவுளைக் கண்டது போல
தோகை விரித்தாடியது மயில்
வண்டுகள் அன்றுதான் முதல்முறையாக
தேனை சுவைத்தது போன்று
ரீங்காரமிட்டன
புல்லிதழ்களின் மீது படிந்திருக்கும்
பனித்துளி பிரியாவிடை பெற்றுச்சென்றது
இன்றைய பொழுது
நமக்கு இறைவன் அளித்தது
இயற்கை அதனை நன்குணர்ந்துள்ளது
மனித மனம் ஆதியிலிருந்தே அதனை
மறந்து வந்துள்ளது.
தொலைந்து போன நிழலைத் தேடி…
பால்யத்திலிருந்து
எனைத் தொடர்ந்து வந்த நிழல்
இன்று தொலைந்து போய்விட்டது!
எனது பாதத்தடங்கள்
கடந்துவந்த பாதையை உளவறிந்து
எங்கு போய்ச் சொன்னதோ?
உணவின்றி, நீரின்றி, காற்றின்றி கூட
ஒருவன் இப்புவியில் வசிக்கலாம்
நிழலின்றி இருக்கமுடியுமா?
மற்றவர்களின்
நிழல்களைப் பார்க்க நேரும்போதெல்லாம்
விசாரிக்கிறேன்
எனது நிழலின் நலத்தைப் பற்றி!
mathi2k9@gmail.com
- இது(ரு) வேறு வாழ்க்கை
- 15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
- மலேசியாவின் கலை இலக்கிய இதழ் ‘வல்லினம்’.
- தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா
- வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்
- பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
- சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
- நினைவுகளின் தடத்தில் – (35)
- பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும் -2
- உயிரின் துடிப்பு
- தனிமையிலிருந்து தப்பித்தல்
- உள்வெளிப்பயணங்கள்
- வேத வனம் விருட்சம் 54
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>
- தொடரும்
- என் வரையில்…
- உன்னைப்போல் ஒருவன்
- நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்
- குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009
- அடைக்கலப் பாம்புகள்
- ஆகு பெயர்
- அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி
- நினைவுகளின் பிடியில் ..
- மழைச்சாரல்…..
- தெய்வம் நீ என்றுணர்
- ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
- அந்த ஏழுகுண்டுகள்…..(1)
- தினேசுவரி கவிதைகள்
- தொடர்பில்லாதவை
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)
- பாத்திரத் தேர்வு
- சேரா துணை..
- சாயங்கால அறை
- புரிய இயலாத உனது அந்தரங்கம்
- சுழற்றி போட்ட சோழிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2
- படம்