நட்சத்திரவாசி
இசையென மழை பெய்து வீழ்கையில்
தனித்திருந்து தியானிக்கிறேன்
எவ்வொரு சலனமுமற்ற உன் முகம் நோக்கி
நமது பாஷையில் ஒருபோதும்
தடங்கலை நீ அனுமதிக்கவில்லை
ஆயினும் உனது மௌனம் பாஷையின்
ஆழங்களை ஊடுருவ வல்லதா
நீயே அறிவாய்
நமக்கான உரையாடலில் நீ ஒரு புறத்திலும்
நான் மறுபுறத்திலும் உதடுகளை பேசாது
பேணிகாத்தோம்
உனது அழைப்பில் நான் மயங்கிய பொழுதுகள்
இப்போது நினைவில் எதற்கு
இரவு நேரங்களில் நீ மெல்ல
பூனையை போல சுவடுபதித்து வருகிறாய்
எனது கனவின் உள்புகுந்து நமது
அந்தபுரத்தில் ஊஞ்சல் ஆட்டுவித்து
அமுதகீதம் வாசிக்கிறாய்
எனது பிரக்ஞை
திரும்பி வருகையில் தனியாக
தவித்து கனம் எய்தி வீழ்கிறேன்
இனி இரவுகளில் எனை அழைத்து
தொந்தரவு செய்யாதே.
போதும் உன் லீலைகள்
நான் தியானிப்பதில் இனி அர்த்தமில்லை
இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை.
- அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?
- அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்
- மொழி வளர்ப்பவர்கள்
- பலிபீடம்
- சமாட் சைட் மலாய் கவிதைகள்
- பெண் கவிதைகள் மூன்று
- இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை
- சாகித்திய அகாதமியின் : Writers in Residence
- காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்
- “தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-
- மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்
- “அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்
- அரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..
- ஜனா கே – கவிதைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- மாய ருசி
- வாழும் பூக்கள்
- அடையாளம்
- விரல் வித்தை
- மனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்
- ஏழைகளின் சிரிப்பில்
- ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு
- ‘யோகம் தரும் யோகா
- எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்
- தலைவன் இருக்கிறார்
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- தொலைந்த கிராமம்
- பிணங்கள் விழும் காலை