ப.மதியழகன்
வனம்
வனத்தில் அடியெடுத்து வைத்த
சில் நிமிடங்களில்
மனிதர்களின் ஆரவாரம் மறைந்து
அந்தகாரம் கவிய
நிசப்தம் சர்ப்பமாய் கண்முன்னே
படமெடுத்துப் பயமுறுத்தியது
பலநூறு கிளைகள் பரப்பி
விசித்திரமாய் அமைந்த
அரசமரத்தின் ஆகிருதி
கானகத்தை எங்கு நோக்கினும்
கண்ணைவிட்டு அகலாமல்
நீக்கமற நிறைந்திருந்தது
விலங்குகளின் கால் தடங்கள்
அழியாமல் பல நாட்களாய்
அப்படியே நிலைத்திருப்பது
கடற்கரை மணலில்
கலைந்துபோய் கிடக்கும்
எண்ணற்ற காலடிச்சுவடுகளை
ஞாபகப்படுத்தியது
மூங்கில்களின் உரசலினால்
உண்டான சப்தம்
வனம் முழுவதும் எதிரொலித்தது
அடர்ந்த அந்த வனாந்திரத்தில்
பாதையைத் தேடித் தேடி
கானகத்தின் இதயப் பகுதியை நோக்கி
கால்கள் செல்லச் செல்ல
மனம் தான் மனிதன் என்பதையே
ஆதாம் நிலையை அடைந்திருந்தது!
காளி
அன்றிருந்த
அதே கடல்
அதே வானம்
அதே நிலவு
அதே நட்சத்திரக்கூட்டங்கள்
அதே சுண்டல்காரன்
அன்று கடற்கரை மணலில்
எனதருகில் நீ
இன்று அவ்விடத்தில் காரிருள்
தனிமையெனும நஞ்சுதனை
மெல்ல மெல்ல அருந்திச்சாகும்
பித்தனாய் நான்
எனதுயிரை களப்பலியாக
எடுத்துக்கொண்ட
காளியாய் நீ.
mathi2k9@gmail.com
- அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?
- அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்
- மொழி வளர்ப்பவர்கள்
- பலிபீடம்
- சமாட் சைட் மலாய் கவிதைகள்
- பெண் கவிதைகள் மூன்று
- இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை
- சாகித்திய அகாதமியின் : Writers in Residence
- காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்
- “தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-
- மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்
- “அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்
- அரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..
- ஜனா கே – கவிதைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- மாய ருசி
- வாழும் பூக்கள்
- அடையாளம்
- விரல் வித்தை
- மனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்
- ஏழைகளின் சிரிப்பில்
- ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு
- ‘யோகம் தரும் யோகா
- எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்
- தலைவன் இருக்கிறார்
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- தொலைந்த கிராமம்
- பிணங்கள் விழும் காலை