பார்வைகள்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



நண்பன் ஒருவனைப்
பார்த்துவிட்டு
காரில் திரும்புகையில்
கைபேசியில் அழைத்த
இன்னொரு நண்பனிடம்
‘அப்படியே இருக்கான் மச்சி’ என்று
சொல்லிக்கொண்டிருந்தான் நண்பன்.

முந்தைய தினம்
நான் இல்லாத நேரம்
வந்திருந்த இவன் குறித்து
என் அம்மா சொன்ன
‘அப்படியே இருக்கான்டா’
சற்று நேரம்
நினைவில் வந்து போனது.

Series Navigation

author

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

Similar Posts