கு முனியசாமி
அந்தி நேரத்து மஞ்சள் வானம்
ஐப்பசி மாசத்து சாரல் மேகம்
ஆடியில் பெருகும் காவிரி வெள்ளம்
மாசறு பெண்ணே நீயென் செல்லம்….
எங்கே இருந்தாய் இத்தனை நாளாய்
எப்படி நுழைந்தாய் இதயத்தில் தானாய்
இத்தனை வேகம் ஈதென்னெ மாயம்
ஈரேழு ஜென்மத்து உறவின் காயம்….
மண்ணில் விழுந்த விதையும் முளைத்து
மரமாய் வளர சிலநாள் ஆகும்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிருள் உருக ஏனிந்த வேகம்….
கல்லாய் இருந்த மனசும் இன்று
பஞ்சாய் போச்சு பாரமாய் ஆச்சு
முள்ளில் விழுந்த மலராய் இன்று
முழுதும் நெஞ்சம் கலங்கிப் போச்சு…
மாயம் செய்தாய் மாசறு கள்ளி
மந்திரம் சொன்னாய் மனதைக் கிள்ளி£
ஐம்பது வயதில் இதுவென்ன கூத்து
அறிந்தும் உருகுது உயிரின் ஊற்று….
தப்பைக் கூட சரியாய்ச் செய்தால்
தப்பும் தப்பும் சரியென் றாகும்
உப்பும் உவர்ப்பும் உணர்வது போல
நட்பும் காதலும் இருந்தால் நன்று ….
கூடா நட்பு கூறுது மனசு
கூட்டிக் கழித்தால் மிஞ்சுதுன் நினைவு
ஊரும் உறவும் உணர மறுக்கும்
உண்மை நட்பையும் உலகம் எதிர்க்கும்….
வேசம் இல்லா உறவு வேண்டும்
விரசம் இல்லா நட்பு வேண்டும்
நாளை நடப்பது தெரிய வேண்டும்
நானுன் னுள்ளே துயில வேண்டும் ….
காமம் இல்லா காதல் வேண்டும்
கண்ணை மூடின் தூக்கம் வேண்டும்
காதல் இல்லா நட்பு வேண்டும்
கண்ணே உன்னுள் சாக வேண்டும் ….
——————
- மயான பராமரிப்பாளர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- Kalima is Mohmedans’ Copyrioght!
- திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்
- சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை -: மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
- விம்பம் குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்)
- சமசுகிருதம் பற்றிய மறுமொழியில்,
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் தமிழ் படிப்போம் பகுதி 1 – 2 புத்தக வெளியீட்டு விழா
- பாலம் பதிப்பகம் தொடக்கவிழா, முதல் நூல் வெளியீட்டுவிழா
- பயணம்
- மறுமலர்ச்சி உரைநடை முதல்வர் வ.ரா. என்ற வ.ராமசாமி
- வெங்கட்சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ – ஒரு பார்வை
- “ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் – தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்
- பிம்பம்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- துப்பட்டா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -4 (மரணத்தில் எஞ்சியவை)
- தேவதைக்குஞ்சே…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>
- தம சோமா.
- மாற்றங்கள்
- தோழி
- ஊசி விற்பவன்
- திருமணமொன்றில்
- வேத வனம் விருடசம் -50
- எங்கேயோ பார்த்த மயக்கம்
- 90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்
- சொல் ரசனை
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் துவக்கம் என்ன ? முடிவு என்ன ? (கட்டுரை: 64 பாகம் -1)
- மறுசிந்தனையில் ஸகாத்
- கலாச்சார மாற்றங்களும், கேலிச்சிந்தனைகளும்
- பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !
- ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி
- பெட்டிக்குள் வயலின்
- சாம், நீ ஒரு விசித்திரமான பெண்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -11
- சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இருபதாவது அத்தியாயம்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- பழிக்குப் பழி – 2
- அரிதார அரசியல்
- காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
- பார்வைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- :நகைப்பாக்கள்:
- கே.பாலமுருகன் கவிதைகள்
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்…
- தெளிவுறவே அறிந்திடுதல்
- சிதைந்த நாட்களோடு ஓய்தல்
- அமைதி
- நோன்பு
- சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !
- உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
- பழிக்குப் பழி