ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
சில்லியின் மனங்கவர் மணல்கரை நிறமோ
கௌத மாலாவின் ரியோ துல்ஸ்
முகப்பு வாசலோ உனது
தோற்றப் பண்பாட்டை எதுவும்
மாற்ற வில்லை !
கோதுமை மிதமாக்கித்
திராட்சைப் பழம் போல்
உருண்டு திரண்ட
உன் வடிவமோ, ‘கிதார்’ வாயோ
மாற வில்லை !
++++++++++
என் இதயமே ! என்னரும் இதயமே !
எல்லா மௌனத் துக்கும் முன்பு
திராட்சை கொடிகள் அரசாளும்
மேட்டு நிலங்கள் முதல்
கீழ்த்தள நஞ்சைப் புலங்கள் வரை
ஒவ்வோர் புனிதப் பீடத்திலும்
பிரதிபலிப்பது
தரணி உன்னைத்தான் !
+++++++++++
திபெத்தின் பனிப் பொழிவு கூட
போலந்தின் கற்கள் கூட
குன்றுகளின் கூசும் தாதுக் கரங்கள் கூட
ஒன்றும் மாற்ற வில்லை
உன் கோதுமைத்
தானிய வடிவத்தை !
++++++++++++
களி மண்ணோ அல்லது
கிதார் இசைக் கருவியோ
கோதுமைத் தளமோ அன்றி
சில்லியின் திராட்சைக் கனிக் கொத்தோ
தன்னிருப்பிடத்தை
உன்மூலம் மெய்ப்பித்துக் கொள்ளும் !
நாகரீக மற்ற நிலவு
தன் விருப்பைத் திணித்துக் கொண்டு
அவை யெல்லாம் தம்
உடமைகளை
உன்னிடம் பறித்துக் கொள்ளும் !
++++++++++++++
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 31, 2009)]
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- முடிவாகவில்லை
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- புன்னகை