ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னரும் காதலி !
உன்னை நேசித்தற்கு முன்னே
எதுவும் சொந்த மில்லை !
ஒன்றும் மனதில் ஒட்டாமல்
புரியாமல்
உருவங்கள் ஊடே
தெருக்களில் திரிந்தேன் !
ஒரு பெயர் எதன் மீதும்
நிலைக்க வில்லை !
காற்றால் உதித்த
உலகம்
காத்தி ருந்தது எனக்கு !
++++++++++
அறைகள் பூராவும் சாம்பலென
அறிந்தவன் நான் !
நிலவு குடியிருக்கும்
குகைகளைத்
தெரிந்தவன் நான் !
குப்பைக் கிடங்குகள்
என்னைப் பார்த்துக் குலைக்கும்
“ஒழிந்து போ” எனும்
வினாக் குறிகள்
அழுத்த மாகி விடும்
மணல் தளத்தில் !
+++++++++++
எல்லாம் காலியாய்க் கிடந்தன
செத்துப் போய்
ஊமையாய்த்
தடுமாறிக் கீழே வீழ்ந்து,
ஒதுக்கப் பட்டு
உருக்குலைந்து
எண்ணிப் பார்க்க இயலாத
அந்நியமாய் !
++++++++++++
யாரோ டாவது நான்
பந்த மோடு
சொந்தமாய் இருந்தேனா ?
இல்லை !
யாரோடு மில்லை நான்
உனது அழகும்
உனது வறுமையும்
இலையுதிர் காலத்தில் பொங்கிடும்
கொடைகளாய்
என்னை
நிரப்பிடும் வரை !
++++++++++++++
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 24, 2009)]
- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்
- பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை
- மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
- கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- NJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION
- screening of the film The Other Song
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- மியாவ் மியாவ் பூனை
- சமாதானத் தூதுவர்கள்
- ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்
- வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’
- ஆசிரியருக்கு
- கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்
- குறுங்கவிதைகள்
- அகம் அறி
- சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!
- வேதவனம்- விருட்சம் 48
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>
- எச்சம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)
- முதிர் இளைஞா..
- புலம்பெயர் பறவைகளை இனி…
- மனிதன் 2.0
- கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை
- வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்
- அஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது
- மிச்சம்
- ரோபோ
- வாரத் தேவை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்
- நினைக்கத் தெரிந்த மனம்…
- மாண்டு விட்ட கனவுகள்….
- தொலைத்தூர பயணம்
- யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
- இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)
- இடைத்தேர்தல்
- தேடல் (ஒளிப்பட கவிதை)
- குருவிகளின் சாபம்:
- சித்திரக்காரனின் சித்திரம்
- விட்டுச்சென்ற…
- இறகுகள் தொலைத்த தேவதை
- அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…