என். விநாயக முருகன் கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

என். விநாயக முருகன்


ஒரு விசாரிப்பு
——————–
நீண்ட நாட்கள் கழித்து
நண்பனொருவன்
தொலைபேசினான்‌‌‌
எப்படி இருக்கிறாய்?
எப்படி போகிறது? கேட்டான்.
அப்படியேத்தான் இருக்கின்றேன்
அப்படியேத்தான் போகிறதென்றேன்
சுவாராசியமற்றவனா‌‌‌ய்
துண்டித்தான் தொடர்பை
அப்படியே இருந்து
அப்படியே போவதிலென்ன
அப்படியொரு ஏமாற்றம்?

சரிபார்த்தல்
——————
‌நீ‌ங்க‌ள் டயல் செ‌ய்த
எண்ணை சரிபார்க்கவும்
என்று சொன்னதில் குழம்பி
மீண்டும் தொடர்பு கொண்டேன்
இந்த முறையும்
அதையே சொன்னாள்
நான் சரிபார்த்த
தகவலை எப்படி
புரியவைப்பது
இவளுக்கு?

பெருநகர கோடாங்கி
———————–
பெருநகரில் அபூர்வமாக
பார்த்த ஒரேயொரு
குடுகுடுப்பைக்காரனுக்கும்
கிராமத்துக்கோடாங்கிக்கும்
மாறியிருக்கவில்லை
எதுவும் பெரிதாக
கையேந்துவது உட்பட

ஒரு வித்தியாசமாய்
பெசண்ட் நகரின்
மின்சார சுடுகாட்டில்
இரவெல்லாம்
இருந்துவிட்டு வந்ததை
தவிர

என். விநாயக முருகன்

Series Navigation

author

என். விநாயக முருகன்

என். விநாயக முருகன்

Similar Posts