சம்பவம்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

ரா. கணேஷ்


பாட்டி இறந்துவிட்டாள்
செய்தி வந்தது

ரயில் ஏறினோம்
சண்டை போட்டு இடம் பிடித்தோம்
ஓட்டலில் சாப்பிட்டோம்

அம்மாவும் அப்பாவும் அழுததால்
நானும் அழுதேன்

இரண்டு நாளில்
மீண்டும் சென்னை வந்தோம்

அப்பா செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்
அம்மா சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்
நான் கி¡¢க்கெட் டிவியில்

தம்பி மட்டும்
ஏன் அழுதோம் என்று
என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தான் !

– ரா. கணேஷ்
ganeshadhruth@yahoo.co.in

Series Navigation

author

ரா.கணேஷ்

ரா.கணேஷ்

Similar Posts