ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நினைத்துக் கொள்ளாமல் உன்னை
நேரே நோக்காமல், காதலி
எத்தனை முறை உன்னைப்
பித்துடன் நேசித்தேன் ! உனது
ஓரக் கண்ணோட் டத்தைப் புரியாது
யாரென அறியாது
தவறான இடத்தில் வளரும் செடியாகத்
தெரிந்து கொள்ளாது
பகலில் கரிந்து போனேன் ! ஆயினும்
கோதுமை மணத்தை மட்டும் விரும்பிக்
காத லித்தேன் உன்னை !
‘அங்கோல்’ நகரின் கோடை நில வொளியில்
ஒயின் கிண்ணத்தை நீ கையில் எடுக்க
ஒருவேளை கற்பனை செய் தேனோ ? அல்லது
நிழலில் நாண் கம்பிகளில் நான் வாசித்து
ஆரவாரக் கடல் போல் அலறிய கிதார்
சீரிசைக் கருவியின் இடையா நீ ?
உனை நான் காதலிப்பதை உணரா மலே
நினை நான் நேசித்தேன். முன்பு நான்
நேசித்ததை நினைவில் தேடிப் பார்த்தேன் !
முன்னை அறிந்தவன் நானுனை யாரென
கள்ளத் தனமாய்ப் பல இஇல்லங்களில் புகுந்து
களவாட நினைத்தேன் உனக்கு விருப்ப மானதை !
திடீரெனத் தொட்டேன் உன்னை
என்னருகில் நீ இருக்கும் போது !
உடனே
நின்று போன தென் நெஞ்சு !
என்கண் முன்னே
நிற்கிறாய் நீ !
தாக்கிடும் காட்டுத் தீ போல்
ஆக்கிர மித்தாய் ஆட்சிக் களத்தை
மாட்சிமை ராணி போல் !
கனல் அரங்கு உனது
ஆட்சிக் களம் !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 4, 2009)]
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -6
- இது பின்நவீனத்துமல்ல-2 (மொழி அறிவும் ஆதிக்க மனோபவாமும்)
- சமஸ்க்ருதம்: யோசிக்கும் வேளையில்…..
- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009
- கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டுவிழா
- தேறுக தேறும் பொருள்
- தமிழ் இலக்கியத்தோட்டம் விண்ணப்பப்படிவம்
- ஜெயமோகன் நிகழ்ச்சி நிரல்
- யுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல்
- நிருத்தியதானம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>
- நஞ்சூட்டியவள்
- பாரமா ? ஞானமா?
- நான்கு கவிதைகள்
- என் காதலி வருவது போல்
- வேத வனம் – விருட்சம் 45
- பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா (1925-2004)
- படைத்தல் விதி
- சுவர்கள்
- மூனாவது
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஏழு
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினைந்தாவது அத்தியாயம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – 1
- மக்களாட்சியும் மணிமண்டபங்களும்
- பேருந்து பயணத்தில் ஏற்பட்ட சிறு அனுபவம்
- ‘ரிஷி’யின் கவிதைகள்
- சிங்கப்பூர் தேசிய தினம் 44
- பசி:
- நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்
- உடைந்த பொம்மைகள்
- சம்பவம்
- இடைவெளி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -2 (முன் பாகத் தொடர்ச்சி)
- வழியனுப்பு