விஜய்கங்கா
1) பாகை 360
வேட்டைக் கணை
கண்டு மீள்கணத்தில்
வேற்றிசை திறம்பிடும்
பட்சிகளின் பயண வரிசை
நகர கோலாலம் இறங்கும்
இரவின் நுனியில்
கோரகம் புரிகிறது
செங்கோகயம் குளத்தினின்றும்
மேற்பாதை சூரியன்
செங்கடலில் குளித்தெழுந்திட
தெற்கே
சண்டு நிறைந்த தெம்பலில்
வெந்நாரை துயில் கலைவதால்
அயிர்த்து விரைகிறது ஒரயிலை
புள்ளிபோல் தோன்றி
புழுதியாய் கிளம்புகிறது
சாலைகளில் வரத்து
நின்ற பாகை தொடங்கி
சுழலும் காட்சிகள்
முற்றிடும்
அம்முதற்பாககையில்
வந்தயரும் பார்வையோ
வேண்டுகிறது ஒரு வேகத்தடையினை
***
2) கரங்கள்
எம் கரங்கள் வேற்று
நிறமுடையவைதான்
இளஞ்சிவப்பாய் இலகுவாய்
இல்லாம்ற் இறுகி
கன்றி விரல்கள் வடிவங்கள் இழந்து
நகங்கள் உடைந்து தேய்ந்து
உறுதியுடன் செயல்படும்
திறத்தை அறிந்தவை
இல்லாமை கண்டு அஞ்சாதவை
எதிர்பதற்காய் ஓங்குபவை அல்ல
அணைப்பதற்காய் அவா உறுபவை
உயர்வதற்காய் செயல்படுபவை
தினமும் உம்முன் நீட்டப்படுகின்றன
உங்கள் நேசங்களுடன் கைகோர்க்க
உம்மையும் சேர்ந்து அரவணைக்க
***
3) ஒலி வெளி காட்சி
இசையாக வடிந்திடினும்
வசையாக மீச்சுடினும்
ஒலியோடு இணைந்து
வளியோடு அடர்ந்து திரிந்து
நீரிலியில் சிதறி உடைந்து
எதிரொலிகளில் சப்தங்கள் திரிந்து
எதிர்ப்படும் ஒலி வாங்கிகளில் விரிந்து பரந்து
செல்லுமிடம் அடையும் பொழுது
வார்த்தைகள் ஏனோ வித்தைகளாய்
பல நிறங்கள் தோய்ந்து
முதற் அர்த்தம் இழந்து
வெறும் சொற்களாகி விடுகின்றன
சொல்லும் பொருளும்
ஏற்கும் மனமும்
சுருங்கி விடும் தருணங்களில்
***
4) ஏதாயினும்
விகலை, கலை
இன்னும் எட்டாத
துண் அலகுகளாய்
பகுக்கப்பட்டிருப்பினும்
பகுதிகள் இணைந்தும்
நேரே
குறுக்கே
நடுவே ஓடி
அச்சமோ
தீர்க்க்கமோ
மத்தியமோ
அசாத்திய வடிவாய்
வார்க்கப்பட்டிருக்கிறது பூமி
இந்த பார்வை
இந்த கேள்வி
இந்த உணர்வு
புலன்கள் ஐந்தும் பெற்று
சிந்தனை ஆற்றலில்
படைப்பின் சிகரமாய்
மனித இனம்!
இன்னும் தேவை என்ன
அழகியல் யாவும்
வசப்பட்ட பின்னும்
அதனையும் கடந்த
பெருஞ்சக்தியின் தேடல்
எதுவோ..? ஏனோ?
***
cv_ganga@yahoo.com
- கோ.கண்ணனின் கவிதைகள்
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- screening of the documentary film Out of Thin Air
- நன்றி, மலர் மன்னன்
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- இரண்டு கவிதைகள்
- ஜெயபாரதன் தொடர்கள்
- மூன்று கவிதைகள்
- நிழலின் ஒளி
- மொட்டை மாடி
- தோற்கப் பழகு!
- இறகுப்பந்துவிடு தூது!
- பறவையின் இறப்பு
- இயலாமை
- ஒலி மிகைத்த மழை
- வேத வனம் – விருட்சம் 44
- ” புறத்தில் பெருந்திணை “
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- இயக்கம்..
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- கண்டனத்துக்குரிய சில…
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- வலியறிதல்
- பூமி என்னும் வண்ணக்கலவை
- சாகசம்
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- இது பின்நவீனத்துமல்ல
- ஊகங்களும் ஊடகங்களும்
- மூன்று கவிதைகள்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- ஆகவே சொல்கிறேன்
- மரணத்தைத் தவிர வேறில்லை
- ஆசை
- வெட்கமற்றது
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- உயிர் தேடும் வண்ணங்கள்
- மெளன கோபுரம்