மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

விஜய்கங்கா


1) பாகை 360

வேட்டைக் கணை
கண்டு மீள்கணத்தில்
வேற்றிசை திறம்பிடும்
பட்சிகளின் பயண வரிசை

நகர கோலாலம் இறங்கும்
இரவின் நுனியில்
கோரகம் புரிகிறது
செங்கோகயம் குளத்தினின்றும்

மேற்பாதை சூரியன்
செங்கடலில் குளித்தெழுந்திட
தெற்கே
சண்டு நிறைந்த தெம்பலில்
வெந்நாரை துயில் கலைவதால்
அயிர்த்து விரைகிறது ஒரயிலை

புள்ளிபோல் தோன்றி
புழுதியாய் கிளம்புகிறது
சாலைகளில் வரத்து

நின்ற பாகை தொடங்கி
சுழலும் காட்சிகள்
முற்றிடும்
அம்முதற்பாககையில்
வந்தயரும் பார்வையோ
வேண்டுகிறது ஒரு வேகத்தடையினை

***

2) கரங்கள்

எம் கரங்கள் வேற்று
நிறமுடையவைதான்

இளஞ்சிவப்பாய் இலகுவாய்
இல்லாம்ற் இறுகி
கன்றி விரல்கள் வடிவங்கள் இழந்து
நகங்கள் உடைந்து தேய்ந்து
உறுதியுடன் செயல்படும்
திறத்தை அறிந்தவை
இல்லாமை கண்டு அஞ்சாதவை

எதிர்பதற்காய் ஓங்குபவை அல்ல
அணைப்பதற்காய் அவா உறுபவை
உயர்வதற்காய் செயல்படுபவை

தினமும் உம்முன் நீட்டப்படுகின்றன
உங்கள் நேசங்களுடன் கைகோர்க்க
உம்மையும் சேர்ந்து அரவணைக்க

***

3) ஒலி வெளி காட்சி

இசையாக வடிந்திடினும்
வசையாக மீச்சுடினும்
ஒலியோடு இணைந்து
வளியோடு அடர்ந்து திரிந்து
நீரிலியில் சிதறி உடைந்து
எதிரொலிகளில் சப்தங்கள் திரிந்து
எதிர்ப்படும் ஒலி வாங்கிகளில் விரிந்து பரந்து
செல்லுமிடம் அடையும் பொழுது

வார்த்தைகள் ஏனோ வித்தைகளாய்
பல நிறங்கள் தோய்ந்து
முதற் அர்த்தம் இழந்து
வெறும் சொற்களாகி விடுகின்றன
சொல்லும் பொருளும்
ஏற்கும் மனமும்
சுருங்கி விடும் தருணங்களில்

***

4) ஏதாயினும்

விகலை, கலை
இன்னும் எட்டாத
துண் அலகுகளாய்
பகுக்கப்பட்டிருப்பினும்

பகுதிகள் இணைந்தும்
நேரே
குறுக்கே
நடுவே ஓடி
அச்சமோ
தீர்க்க்கமோ
மத்தியமோ
அசாத்திய வடிவாய்
வார்க்கப்பட்டிருக்கிறது பூமி

இந்த பார்வை
இந்த கேள்வி
இந்த உணர்வு

புலன்கள் ஐந்தும் பெற்று
சிந்தனை ஆற்றலில்
படைப்பின் சிகரமாய்
மனித இனம்!

இன்னும் தேவை என்ன
அழகியல் யாவும்
வசப்பட்ட பின்னும்
அதனையும் கடந்த
பெருஞ்சக்தியின் தேடல்
எதுவோ..? ஏனோ?

***

cv_ganga@yahoo.com

Series Navigation

author

விஜய்கங்கா

விஜய்கங்கா

Similar Posts