இயலாமை

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

நளன்


மின்சாரம் நின்ற‌ இரவொன்றில்
ஒளிரும் அகலின் வெளிச்சத்தில்
கட்டவிழ்த்து திளைக்கிறீர்கள்
நானோ எரியும் திரியின் வேதனையில்
மௌனித்திருக்கின்றேன்.

கொடி காற்றில்
அழகாய் பற‌ப்பதாயெண்ணி உளமகிழ்கின்றீர்கள்
நான் நினைத்துக்கொண்டிருகின்றேன்
அது விடுதலையின்கண் துடிப்பதாய்.

நீங்கள் பூத்து குலுங்கும்
வண்ண மலர்களை ரசித்துக்கிட‌க்கையில்
எனது கவலைகளென்னவோ
விற்காமல் போன மலர்களை பற்றியதானவை.

எவ்வளவோ முயற்சி செய்தும்
எனதிந்த‌ வாழ்வோடோ
இல்லை உங்கள் சமூகத்தோடோ
இன்னும்கூட இண‌ங்கி போக‌ முடிவதேயில்லை.

எல்லாவ‌ற்றையும் விட்டு
எங்காவ‌து போய்விட்டால்தானென்ன‌?

இழ‌ப்புக‌ளனைத்தும்
ச‌மாதான‌த்திற்க்கு அப்பாற்ப‌ட்ட‌வைக‌ளென‌
புரிந்ததொரு மழை நாளில்
புதிய‌ வ‌ன‌மொன்றிற்கு
ஒரு ப‌ற‌வையாக ப‌ற‌க்க‌ எத்தனைக்கிறேன்

முக‌மறியாத‌ யாரோ சொல்லி செல்கிறார்கள்
சிறகொடிந்த பட்டாம்பூச்சிகள்
பறப்பதில்லையென.

Series Navigation

author

நளன்

நளன்

Similar Posts