கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran Paintings
“The Blind Love”

“நான் சுதந்திரச் சுய மனிதனாக இல்லாமல் ஒரு வாலிப இளைஞனாக இருப்பதை வெறுத்து வெகுண்டெழுகிறேன்.”

“நீயே உனக்கு ஒரு முன்னோடி ! நீ எழுப்பிய கோபுரங்கள் உன் பூதகரமான சுயத்துவ அமைப்பின் அடித்தளம் ! மேலும் அந்த சுயத்துவ உணர்வே ஓர் அடித்தளமாகவும் உள்ளது.”

“நீ எனது சகோதரன். நாமிருவரும் ஒரே உலகளாவிய புனித ஆன்மாவுக்குத் தோன்றிய புதல்வர்கள், ஒரே களி மண்ணில் உருவான ஒரே உடலின் சிறைக் கைதிகளாய் இருப்பதால் என்னைப் போன்றவன் நீ. வாழ்க்கையின் பிரிவுப் பாதைகளில் மூடுபனிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மெய்ப்பாடுகளைப் புரிந்து கொள்ள எனக்குதவும் துணைவன் நீ. நீ மனித இனத்துவன் சகோதரா ! நான் உன்னை நேசிக்கிறேன்.”

கலில் கிப்ரான்

+++++++++

<< என்னை விலக்கி விடு >>

கவிதை -13 பாகம் -2
(முன் கவிதைத் தொடர்ச்சி)

பயமுறுத்த வேண்டாம்
என்னைக்
காட்டுச் சிங்கங்கள்
பள்ளத்தில் ஊறும்
பாம்புகள் பெயரைச் சொல்லி !
காரணம் என் ஆத்மா
தாரணியில்
அஞ்சுவ தில்லை
எதற்கும் !
தீயவை பற்றி அறிவிக்கும்
எச்சரிப்பை
ஏற்றுக் கொள்ளாது
தீயவை
என்னை நெருங்கும்
முன்னே !

அவசியம் யில்லை உனது
அறிவுரை
என்னைப் பழிப்போனே !
என் இதயம்
திறந்து கொண்டது
பேரிடர்களால் !
என்னிரு கண்கள்
கழுவப் பட்டன
நீர்த்துளிகளால் !
இதய மொழிப்
பாடத்தை
நான் கற்றுக் கொண்டது
என் தவறுகளால் !

நாட்டை நீங்குதல் பற்றி
நமக்குள் பேச்சு வேண்டாம் !
ஏனெனில்
மனச் சாட்சியே
எனக்கு நீதிபதி !
நிரபராதி யென்றால்
காப்பாற்றி அது
நியாயம் அளிக்கும் எனக்கு !
குற்றவாளி நானெனில்
குடி வாழ்வைத்
தவிர்க்கும் என்னைத்
தண்டித்து !

காதல் முன்னேறிச் செல்லும் !
பச்சைக் கொடி
காட்டும் அழகத்துவம் !
இன்பச் சங்கை ஊதும் என்
இளமை வாலிபம் !
என்னைப் பழிப்போனே !
எனது மனது நெகிழ்ச்சிகளைக்
கலைக்காதே !
என் பாதையில் நடக்கிறேன் !
வழி முழுதும்
செழிப்பாய் உள்ளது
ரோஜாவும் கற்கண்டும்
நிரம்பி
மாசில்லாத் தென்றலின்
வாசனை யோடு !

செல்வம் சேர்க்கும் வழியும்
செல்வாக்கைப் பெறும்
போக்கும் நீவீர்
போதிக்க வேண்டாம் !
ஏனெனில்
எனது ஆத்மா
கொடைப் பூரிப்பில்
நிறைந்து போய் உள்ளது
இறைவன்
கீர்த்தி யோடு !

என்னிடம் இவற்றைப் பேசாதீர்
மனிதரைப் பற்றியும்
மாந்தர் விதிகளைப் பற்றியும்
வேந்தர்
அரசாட்சி பற்றியும் !
ஏனெனில்
இந்த வையகமே
எனக்குப் பிறந்த பூமி !
எல்லா மனிதரும் எனக்குச்
சகோதரர் !
என்னை விட்டு அகல்வீர்
ஏனெனில்
ஒளி காட்டும்
என் பரிவு நோவுதலைப்
பறித்துச் செல்கிறீர்
தேவை யற்ற
குறிப்புரை களோடு !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 13, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts