மழை

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

ஜி.எஸ்.தயாளன்


வானம் பார்த்தப் பூமியில்
பூமி பார்த்து மழை

மண்ணில் வீழ்ந்ததும் உயிர்க்கும் மண்
தெருத் தெருவாய் கால்வாய்கள்

மழையில் மனிதர்கள்
மிருதுவானார்கள்

தூங்கும் மரங்கள்
சிலிர்த்தெழுந்தன

முற்றத்து மழை நீரில்
விளையாடும் குழந்தைகள்

வேளிமலை மறைய
புலப்படும் ஈரக்காற்று

மழையில் நனைந்த
முலைகளில் போகம்

மழைச் சத்தம் சூழ்ந்திருக்க
புனர்தலே புணர்தல்

மாரிப்பாட்டு தாலாட்டு
உறங்கவும் இதுவே இரவினும் தருணம்

மழைநேர தேநீருக்கு
ஐந்து ரூபாய் அதிகமில்லை

குடைகளைத் தொலைத்து
சாவகாசமாய் நடந்து போ

gsdhayalan@gmail.com

Series Navigation

author

ஜி.எஸ். தயாளன்

ஜி.எஸ். தயாளன்

Similar Posts