கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

கார்த்தி. என்


——–
கணக்கீடு..

குறிகளில்
கவனமின்றிக்
கரும்பலகையைப்
பலவண்ணமாய்
யோசித்தமர்ந்திருக்கும்
குழந்தைக்குக்
கணக்கைத்
திணித்து விடாதீர்கள்..

ஒருகாலத்து ஓவியன்
செத்துப் போகலாம்..
——
முழாண்டு..

தனித்தனியாய்ப்
படித்திருந்தும்

தேர்வில்
ஆற்றில் மிதந்தது
மரத்தின் தன்வரலாறு.
====
குறி தவறல்..

நிமிர்ந்து
நின்று
ஒன்றொன்றாய்ச்
சேர்த்துச்
சோர்ந்து போய்

சமயத்தில்
வளைந்து கொடுத்துப்
பெருக்கத் தொடங்குகிறது

———-
கூட்டல் குறி.

1 x 1
ஒன்றைப்
பெருக்க
அப்படியே
இருக்கிறது
இன்னொன்று.
…………………………
……………………………………………………..

Series Navigation

author

கார்த்தி. என்

கார்த்தி. என்

Similar Posts