மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Kahlil Gibran Paintings
“I Will Get You from the Heaven”
அழகுத்துவம்* என்பது ஒருவர்
ஆத்மாவை ஈர்ப்பது !
எடுத்துக் கொள்ள விரும்பாது
ஈவதற்குக் களிப்புறுவது !
கலில் கிப்ரான் (அழகுத்துவ சிம்மாசனத்தின் முன்னே)
*(Beauty) – அழகுத்துவம்
“நேற்று இந்தக் கலியுகத்துக்கு எதிராய்ப் புகார் செய்து அஞ்சினோம் ! ஆனால் இன்றதைத் தழுவிக் கொண்டு நாம் காதலிக்கிறோம்.”
கலில் கிப்ரான்
“இன்பம் என்பது வேரைச் செழிப்பாக்கும் ஒரு கொடி, புறத்தே எழாமல் இதயத்தின் உள்ளே உருவாகி வளர்வது.”
கலில் கிப்ரான்
+++++++++
<< என்னை விலக்கி விடு >>
கவிதை -13 பாகம் -1
என்மேல் பழிசுமத்து வோனே
என்னை விலக்கிச் செல்
நம் காதலை முன்னிட்டு !
உன் ஆத்மாவும்
என் ஆத்மாவும் ஐக்கிய மாகி
ஒன்றாய் இருந்தவை
அன்னையின் பரிவு
ஆன்மாவோ டிணைந்ததை
முன்னிட்டு ! அந்தப்
பின்னலே
உன் இதயத்தை
மெய்யாக
நெய்யும் அன்போடு !
என்னை விலக்கிச் செல்
அழுகின்ற
என் இதயத் தோடு !
எந்தன் கனவுக் கடலில்
உந்திச் செல்ல வேண்டும் நான் !
பொறுத்திரு நாளை வரை
ஏனெனில் நாளைக்கு
நீ சுதந்திர மாய்ச் செய்யலாம்
நினைத்தபடி !
துளைத் தென்னை நீ
உளவு செய்வது சரி யில்லை !
அது வெறும் நிழலாய்
ஆன்மா வுடன் நடக்கும்
சமாதி நிலையை நோக்கி !
மேலும்
குளிர்ந்து போன
திண்ணிய
மண்ணுலகைக் காட்டும் !
என்னுள்ளே சிற்றிதயம் ஒன்று
இருக்கிறது !
விடுவித்துச் சிறையி லிருந்து
அவனை
வெளியே நீக்கி விட
விழைகிறேன் !
உள்ளங் கையில் நிறுத்தி
அவனை
உளவ வேண்டும் ஆழமாய்
இரகசி யத்தைக்
கறந்து வர !
இறைவன் அளித்த
தன்னம்பிக்கை என்னும்
பழி பீடத்தில்
இரகசியக் குருதியைப்
பொழியும் முன்
குறிவைத்து அம்புகளை
ஏவாதே
அவன் மீது !
இல்லையெனில் அஞ்சி
ஏகிடுவான்
கண் காணாது !
அழகுத்துவமும் காதலும்
அவனாக
மாய நளினம் அடையும்
அத்தருணம் !
எழுகிறது இளம் பரிதி !
இன்னிசை பாடுது குயில் !
நறுமணம் வீசுது
புல்லிலை
விண்வெளியில் !
விடுபட்டெழ வேண்டும்
நான் எனது
குற்ற உறக்கத்தை விட்டு !
கட்டிப் போடாதே
என்னைப்
பழிப்போனே !
(தொடரும்)
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 6, 2009)]
- ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9
- திரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்
- கடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- ‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.
- ” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”
- துயரம் ஒரு வரைபடம்
- இருளைக் கடப்பதுதான் தைரியமா?
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)
- அறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.
- அச்சமுண்டு அச்சமுண்டு- அமெரிக்காவில் வெள்ளித்திரையில்
- யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?
- அக்னிக்கூத்து – நாடக அறிமுகம்
- Dear Editor,
- தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி
- நிர்வாண நடனம்
- அறிதல்..
- தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்
- அறுபடும் மரணங்கள்….
- நண்டு சொன்ன `பெரியவங்க` கதை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- கருணை கொலை
- சுழற்பந்து
- அநாகரிகமான விவகாரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- நினைவுகளின் தடத்தில் – (33)
- ஓரினசேர்க்கை
- பாலாவை இழந்த கணங்களில்…
- அத்துமீறல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை
- வேத வனம் விருட்சம் – 41
- யாருக்கும் பொதுவான
- கவிதைகள்
- மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்
- மூன்று கவிதைகள்