மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

நட்சத்ரவாசி


1
இன்றைய தினம்
நேற்றைய தினத்தின்
தொடர்ச்சியாகவே இருக்கிறது
பிறிதொரு தினமும்
அப்படித்தான்
உறங்கிய போதும்
உறங்காத போதும்
சூரியனும் இருந்தது
நிலவும் இருந்தது
சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்
ஒரு தினம் வரும்
பிறிதொரு தினம் இல்லா
முடிந்த தினம்
இப்படியாக தான் தினங்கள்
போய்கொண்டிருக்கிறது.

2
உன்முகம் மறைய
லிப்ட் அடைத்து
கொண்டாலும்
லிப்ட் திறக்கும் போது
வேறோர் முகம்
நிச்சயமிருக்கும்
உன்முகத்துக்கும்
வேறோர் முகத்துக்கும்
மின்னற் பொழுதே
தூரம்.

3
அவன் கவனமாக
கூர்தீட்டிய
கத்தியால்
முகத்தை மழிக்கிறான்
கத்தி வைத்திருக்கும்
அவனை குறித்து
கவனமற்றிருக்க
ஏதேனும் சில
சிந்தனைகள்
உண்டுதானே
நம்மில் பலருக்கும்

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

author

நட்சத்ரவாசி

நட்சத்ரவாசி

Similar Posts