கே.பாலமுருகன்
1. சுவர்களில் முளைத்த குழந்தைகள்
வீட்டின் சுவர்களில்
குழந்தைகளின்
படங்கள்
வெளிப்பட்டுக் கொண்டிருந்த
தருணங்களில்தான்
பிறழ்வு கொண்ட
வெயில்கள் உள்நுழைய
ஆரம்பித்தன
சுவர்களில் முளைத்த
குழந்தைகள்
சிரிப்பைக் கற்றுக்
கொண்டார்கள்
நடுநிசியில்
அவர்களின்
அபார சிரிப்பொலிகள்
வீட்டை
உருகுலைத்தன
சுவர்களின் குழந்தைகள்
கைகளை நீட்டி
எங்களைத் தொட
முயற்சித்தார்கள்
அகல்வதாக
அந்தச் சுவரின்
நெருக்கத்தைத் தொலைத்து
மகா இடைவெளியில்
வாழப் பழகினோம்
குழந்தைகளின் கண்கள்
எங்களின் நகர்விற்கேற்ப
அசைந்து கொண்டேயிருந்தன
சுவர்கள்
குழந்தைகளை
மெல்ல துறக்கத்
துவங்கின
சுவர் உதிர்
காலமென்பதால்
கால்கள் அற்றவர்களாக
ஒற்ற கைகளுடன்
குழந்தைகள்
சுவரிலிருந்து
விழுத்
தொடங்கினார்கள்
கே.பாலமுருகன்
2.
ஒளிகளைச் சேகரிக்கும்
பழக்கித்திற்கு ஆளாகியிருக்கும்
சிலரின் வீடுகளில்
பூச்சாண்டி
நுழைந்து கொண்டதாக
சொன்னார்கள்
ஒவ்வொரு ஒளிகளிலும்
சாத்தான்கள்
ஊடுருவதாக
சொல்லிக் கொண்டார்கள்
மிகவும் சாதுர்யமாக
வீட்டிலிருப்பவர்களின்
உடல் பாகங்களை
தின்று தீர்க்கத்
துவங்கின
சாத்தான்களின்
ஒளிகள்
ஒளிகள்
இருபிளவுகளாக
நகர்ந்தன
ஒன்றில்
பரமாத்மாவைப்
மற்றொன்றில்
ஜீவாத்மாவைப்ம்
சுமந்து கொண்டு
கே.பாலமுருகன்
3.
கண்ணாடி பேழைகளுக்குள்
பத்திரப்படுத்தி வைத்தேன்
சில உயிர்களையும்
உடல்களையும்
உடல்களிலிருந்து
வெளியேறிய
ஆண் விந்துகளின்
நெடி
உயிர்களுக்கான
துவக்கங்களை
மெல்ல கிளர்த்தியதும்
பேழைகளிலிருந்து
வழியத் துவங்கின
கடவுள்கள்
மூத்திர வாடைகள்
நுழையாதபடி
பெண் சிசுக்களை
வீட்டின் தரைகளில்
புதைத்து வைத்தேன்
கடவுளின் மாயம்
வழிந்தோடும் காலம்
நெருங்கியதும்
சிசுக்கள்
எழுந்து ஆரவாரமாக
தரைகளைச் சுமந்து
கொண்டு
அலையத் துவங்கின
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -6
- கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்
- கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு ஓர் நினைவஞ்சலி
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- விமர்சனக் கடிதம் – 3 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(3)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(2)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(1)
- துரோகம்
- கடல் விழுங்கும் ஆறுகள்….
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! 2012 ஆம் ஆண்டில் பரிதியின் துருவம் திசைமாறும் போது பூமிக்கு என்ன நேரிடும் ?
- ஆன் ஃப்ராங்க் – யூத அழிப்பின் போது ஒளிந்திருந்து டயரிக் குறிப்புகள் எழுதிய சிறுமி
- சங்கச் சுரங்கம் – 18 : பட்டினப்பாலை
- அறிவியல் புனைகதை-: அரசு நின்று சொல்லும்
- இதயத்தை நிறைத்த இரு இலக்கிய நிகழ்வுகள்
- உதிரும் இலைக்கு பதில் பயனளிக்காது
- கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.
- பேருண்மை…
- கே.பாலமுருகன் கவிதைகள்
- எம் மண்
- வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரங்கள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்பது
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஏழாவது அத்தியாயம்
- தேவதைகள் காணாமல் போயின
- துப்பாக்கிகள் குறி பார்கையில் ..
- முஸ்லிம் உலகிற்கு ஒபாமா சொல்ல மறந்தவை
- பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- வெ.சாவுக்கு வலக்கர விளக்கம்
- ஆணாதிக்க உலகில் பெண்ணாய் வாழ்தல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -40 << யுத்த வீரன் காதலி >>
- கோபங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மனிதனின் கானம் >> கவிதை -11 பாகம் -1
- வேத வனம் விருட்சம் 37
- துரோகத்தின் தருணம்