தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னைத் தவிர மிகுதியாய்
வேறு எவரும்
விரும்பு வதில்லை
உன் கண்ணிமைகள்
தலையணை மீதிருந்து
உலகை எனக்குத் தெரியாமல்
மூடி இருப்பதை !
அங்கும்
உனது இனிய நெருக்கத்தில்
எனது இரத்தம்
உன்னோடு பள்ளி கொள்ள
விடுவிப்பேன்
என்னை நானே !
எழுவாய் !
எழுந்து நிற்பாய் !
என்னோ டிணைந் தெழுவாய் !
இருவரும் செல்வோம்
இணைவாய் !
எதிர்த்துப் பேய்க் குழுவோடு
போரிடுவோம்
நேருக்கு நேராய் !
பசிக்கு பாதை அமைக்கும்
ஏற்பாட்டுக் கெதிராய்,
அதிகார வர்க்கத்தின்
துன்பச்
சதிகளுக் கெதிராய் !
வாராய் ! இருவரும் செல்வோம் !
தாரகை நீ எனக்கு !
வாராய் என்னுடன் !
புதிதாய் ஒரே மண்ணில்
உதித்தவள் நீ !
ஒளிந்திருக்கும் ஊற்றினை
நெருப்புக்கு இடையே நீ
தெரிந்தி ருப்பவள் !
அருகிலே நீ இருக்கும் வேளை
உனது வீர விழிகள்
உயர்த்தும் என் கொடியை !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 2, 2009)]
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- பனித்துளி புகட்டிடும் பாடம்
- ஆதமி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ?(கட்டுரை: 59)
- சங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ
- மெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை
- விமர்சனக் கடிதம் – 2
- கடிதம்
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009
- நர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்
- வாழ்க ஜனநாயகம் !
- முட்டர்பாஸ் Mutterpass
- அப்பா
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5
- தகவல்
- மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்
- சத்தமின்றிப் பூக்கும் பூ
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- விளம்பர இடைவேளைகள்
- நினைவுகளின் தடத்தில் – (32)
- செத்தும் கிழித்த கமலா சுரையா
- நவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்