தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னோடு நீ இருப்பது
எனக்குள்ளே
எத்துணை இழப்பு எண்ணத்தை
எழுப்புது அந்தோ ?
மானிட வெற்றி வீரர்களில்
நானொருவன் !
ஏனெனில்
நீ அறிய மாட்டாய்
உன்முகம் இதுவரைக் காணாது
என்னோடு இருப்பவர்
ஆயிரக் கணக் கானவர் !
பன்முறை வெற்றி பெற்றவர்,
என்னோடு அணிவகுத்து
ஒன்றாய் நடந்த
இதயங்கள் ! பாதங்கள் !
எனை நீ அறியாதவள் ! நான்
ஏகாந்தி அல்லன் !
தனித்து வசிப்போன் அல்லன் !
அணி வகுப்பில்
என்னோடு வருவோருடன்
மட்டும்
முன் வரிசையில்
நின்று
வழி நடத்துவேன் !
வலுப் பெற்றவன் நான் !
ஏனெனில்
என்னோடு இருப்பது
சின்னஞ் சிறிய
என் வாழ்வு மட்டு மின்றி
எல்லாரது வாழ்வுகளும்
பின்னியது !
தளராத நடையில்
நான் முன்னோக்கிப் போகிறேன்
ஏனெனில்
ஆயிரம் விழிகள் எனக்கு !
தாக்கி அடிக்க இருக்கிறது
பாறைப் பளு எனக்கு !
காரணம்
ஆயிரம் கைகள் எனக்கு !
உலகக் கடற்கரை எங்கணும்
ஒலிக்கும் குரல் எனக்கு !
ஏனெனில்
பேசாதோர், பாடாதோர்
எல்லோரது
ஓசை முழக்கமும் சேர்ந்தது !
இன்றைக்கு அவர் இசைக்கும்
இக்குரல்
உன்னை முத்தமிடும்
என் வாய்க் குரல் !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 25, 2009)]
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
- சுவர்க்கம்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4
- “மாற்றம்”
- தமிழ் சேவைக்கு இயல் விருது.
- நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
- சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை
- மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”
- வயதாகியும் பொடியன்கள்
- எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்
- மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு
- பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு
- பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்
- விருட்ச துரோகம்
- என்றாலும்…
- திமிர் பிடிச்சவ
- பட்டறிவு
- ஞாபக வெளி
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு
- கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்
- மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)
- ஸெங் ஹெ-யின் பயணங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3
- வேத வனம் விருட்சம் 36
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>
- மலைகளின் பறத்தல்
- வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்