கவிதா (நோர்வே)
தூரதேசத்திருந்து
ஈழத்தமிழர்கள் பேசுகிறோம்
உங்களுக்காகவே
நாங்கள் உரத்தெழுகின்றோம்
கைவிடமாட்டோம்!
எங்கள் மனங்களில்
தமிழ்ஈழம் மலர்ந்தாயிற்று
பயந்துவிடாதீர்கள்
எங்கள் மண்ணைவிட்டு
நகர்ந்து விடாதீர்கள்
சீறிவரும் குண்டுகள்
நிறுத்தக்கோரி
எங்கள் பிஞ்சுகள்
போராளிகளாய்
இங்கேயும் வளர்ந்துவிட்டார்கள்
நாட்டில் எம் போராளிகள் யார்?
மக்கள் தானே
மக்களே நீங்களும்
போராளிகள் தானே
மனம் தளராது
எதிர்த்து நில்லுங்கள்
தோட்டாக்களை.
உங்களுக்காக
நாங்கள் இருக்கிறோம்
அங்கே எம் போராளிகள்
உங்களோடு இருப்பது
உங்களைக் காப்பதற்கே
அவர்கள் சொல்வதைக்
கவனத்துடன் கேளுங்கள்
இராணுவம் உங்களைப்
பிணக்குவியல் செய்யும்
பயந்துவிடாதீர்கள்
எஞ்சியவர்களே எப்படியேனும்
நிழல்படங்கள் அனுப்பிவையங்கள்
உலக நாடுகளுக்கு எடுத்துரைப்போம்
பிரச்சாரத்துக்குரிய காலமிது
உங்களால் அங்கு
பேசமுடியாதென்பதை
நாங்கள் நன்கறிவோம்
அதனால் உங்களுக்கும்
சேர்த்து நாங்களே பேசுகிறோம்
வாக்களிப்பும் நாமே செய்வோம்
எம் ோராளிகளின்
பயங்கரவாத முத்திரையை
அப்புறப்படுத்துவோம்
அதுவரை
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்
குண்டுகளுக்காய் பயந்துவிடாதீர்கள்
நகர்ந்து விடாதீர்கள்
இராணுவப் பேய்களிடமும்
ஒப்படைத்துவிடாதீர்கள் உங்களை
பெண்களை நிர்வானமாய்
பிரித்துன்னும் பிடாரிகள்
அவர்கள்
உருப்புகள் கொய்த்து
உயிர்பெற்று வாழ்பவர்கள்
தெரியாத பேய்களிடம் போய்
ஏன் மாட்டிக் கொள்வான்
இடவசதியோ
அடிப்படை வசதியோ
இல்லையங்கு
பாதுகாப்புவலையத்தில் இருந்து
பறந்து போனவர்களே
எந்த உதவியும் உங்களுக்கு இனி
நாங்கள் செய்தால்
அரசாங்கதை எப்படி குற்றவாளியாக்குவது
தமிழ்ஈழத்தை எப்படி வென்றெடுப்பது
அதனால்
கொஞ்சம் பொறுத்திருங்கள்
உங்கள் மனங்களை
நாங்கள் அறிவோம்
கடும் குளிரிலும்
மழையிரவிலும்
நாங்கள் போராடுவது
உங்களுக்காகவே
எங்கள் மனங்களில் இங்கே
என்றோ மலர்ந்துவிட்டது
தமிழ்ஈழம்!
இத்தனைநாள் தவம்
கலைத்துவிடாதீர்கள்.
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்
விருட்சம் பிடுங்கி
உங்கள் வீட்டு
முற்றத்தில் நாட்டுவோம்
நாங்கள்!
-கவிதா (நோர்வே)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.
- மே 2009 வார்த்தை இதழில்…
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
- நேசக்குமார் அவர்களின் கட்டுரை
- சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
- பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
- வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”
- தலைவாசல்
- ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
- பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
- நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை
- நேசகுமாருக்கு என் பதில்
- Call for Submissions for the 8th International Tamil Short Film Festival
- அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு
- சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி
- புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
- மூர்த்தி எங்கே?
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- மனச்சுமை
- ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்
- வேத வனம் – விருட்சம் 34
- பூங்கா!
- அதிரூபவதிக்கு…..
- ஐந்து கவிதைகள்
- மரணம் பேரின்பம்
- புத்திஜீவிகள்
- தூரதேசத்திருந்து
- மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009