நரகம்

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

ஸ்ரீபன்



சொர்க்கத்தின் வாசல்
எங்கு தொடங்குகிறதோ தெரியாது
நரகத்தின் வாசல் மட்டும்
கொழும்பிலிருந்து தொடங்குகிறது

சித்திரகுப்தர்கள் கையில்
நீண்ட மரண சாசனங்கள்
எமதர்மனுக்கு மட்டுமென்ன
நீண்ட கால வழக்குகளை
சடுதியில் முடித்து
விடுமுறை போகும் அவசரம்

பாசக் கயிறு பற்றாக்குறைபோலும்
இந்தியாவிற்கு அடக்கடி
பயணப்படும் எமதூதர்களுக்கும்
அப்படியொரு அவசரம்

யாருமில்லை உதவ இன்று
என்ன நடக்கும் பெரிதாக
நரகத்தில் கால்பதிப்பதைவிட
சொந்தமண்ணிலேயே கெத்துப்போகிறோம்
ஈழத்தமிழராகவே

உயிரென்ன பெரிதா?
நரம்புகளால் பின்னப்பட்டு
கை கால் முழைத்ததால் மட்டும்
மனிதனென்று அடையாளமா?

சொந்த மண்ணிலேயே
செத்துப்போகிறோம்
உணர்வுள்ள மனிதராய்


Series Navigation

author

ஸ்ரீபன்

ஸ்ரீபன்

Similar Posts