தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கடல் மணல் மீது நான்
நடந்த போது
உன்னை விட்டு விலகத்
தீர்மானித்தேன் !
நடுங்கி வந்த
கருங் களிமண் மேல்
கால் தடம் பதித்தேன் !
களிமண் ணுக்குள்
கால்கள் முங்கியும்
மேல் எழுந்திடும் போது
உறுதி செய்கிறேன் :
என்னி லிருந்து நீங்கி நீ
வெளிவர வேண்டும் என்று !
பளுப் பாறையாய்
அழுத்தி
என்னைக் கீழே
அமுக்கிக் கொண்டிருக்கிறாய் !
உன் வேரைப் பிடுங்கிக்
காற்றில்
பறக்க விட்டு
படிப் படியாய்
உன்னை இழந்து போவதால்
என்ன நஷ்டம்
ஆகும் என்று
எண்ணிப் பார்க்கிறேன் !
ஆகா ! என் கண்மணி !
ஒரு கணத்தில்
கனவு ஒன்று
கொடூர இறக்கை யோடு
போர்த்திக்
கொண்டுள்ளது
உன்னை !
உணர்ந்து கொண்டாய் நீயே
உன்னைக் களிமண்
விழுங்கிக் கொள்வதாய் !
உடனே நீ
விளித்தாய் என்னை !
ஆயினும்
விரைந்திட வில்லை நான் !
எதிர்ப்பின்றி நீயே
அசைவின்றிப்
புதைந்து கொண்டிருந்தாய்
புதைமண்ணில்
மூச்சு முட்டி !
என் முடிவு பிறகு
வெறுப் போடு
எதிர்கொண்டது
உன் கனவை,
உதிரும் நம் இதயங்களின்
முறிவுகளை !
மீண்டெ ழுந்தோம் இருவரும்
தூய காதலராய்
நிர்வாணத்தில்
கனவின்றி,
களிமண் ணின்றி
கதிரொளி முழுதாய் வீசிக்
கனல் நம்மைக்
கவச மாக்கி !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 6, 2009)]
- நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் – கோவிந்தசாமி கடிதம் பற்றி
- டெல்லி கலாட்டா மின்னிதழ்
- I, BOSE by ELANGOVAN
- மத்திய இத்தாலிய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம் ! (2009)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -4
- கலில் கிப்ரான் கவிதைகள் << வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் ேர்தலாயிருந்தால் என்ன?) BJP (பா.ஜ.க) வாக்குறிதிகள்
- ஒரு நல்ல சிநேகிதி
- கடைசிப் புத்தகம்
- பூச்சாண்டி இதழ் – சாருநிவேதிதாவிற்கு கோபால் ராஜாரமின் பதில் குறித்து
- “எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
- தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)
- சங்கச் சுரங்கம் — 9 : சங்கநிலா
- ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்
- இரு கவிதைகள்
- வேத வனம் விருட்சம் 31
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பது
- மறைக்கப்பட்ட செய்திகளும் பக்கச்சாய்வான விவாதமும்
- சென்னை சேரிவாழ்முஸ்லிம்கள -அடித்தள தொழில்கள்
- மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள்
- தமிழ் புத்தாண்டு சித்திரை 1 மற்றும் தை 1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -31 << என் கனவு ! >>
- அகதியாயும் அனாதையாயும்…
- இன்று…
- காக்கைப் பாடினியின் பேச்சு/ எனது கடவுளின் மரணம் நிகழ்ந்திருக்கிறது
- அம்மாவின் துர் கதை
- சூன்யத்தில் நகரும் வீடு