தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உன்னைத்தான் தேர்ந்தெடுத்தேன்
எல்லாப் பெண்டிருக்குள்ளே
இந்தப் பூமியில் !
நடன மிடும் என் இதயம்
நாட்டிய அணியோடு
அல்லது
போராட்டம் புரியும்
தேவை யான போது
திசை தெரியாது !
என் மகன் எங்கே
என்றுன்னைக் கேட்டேன் ?
என்னை உணர்ந்து கொண்டு
எனக்குள்ளே சொல்லிக் கொண்டு
உன்னுடைய
கருவுக் குள்ளே
எதிர்பார்க்க வில்லையா
என்னை நானே ?
என் மகனை
எனக்குத் திருப்பிக் கொடு !
இன்பக் கதவுகளுக் கு:ள்ளே
மறந்து விட்டாயா
மகனை ?
பகைத்து வீணாக்குபவளே !
சந்திக்கும்
இந்த இடத்துக்குப்
பந்த பாசமோடு
வந்திருப்பதை நீ
மறந்து போனாயா ?
நாமிருவரும் இணைந்து
அவன் வாய் மூலம்
எனது காதலைச் சொல்லியதை
மறந்து போனாயா ?
நமக்குள்ளே
ஒருவரிடம் ஒருவர்
உரைக்க முடியாமல் போனது
ஒவ்வொன்றும்
உனக்கு
நினைவில் உள்ளதா ?
நெருப்பும் குருதியும்
கலந்த அலையி லிருந்து
மீட்டுன்னை நான்
மேலே
தூக்கும் போது
இரட்டிப் பானது வாழ்க்கை
நமக்கிடையே !
எவரும் நம்மோடு
இதுவரை உரையாட வில்லை !
ஒருவர் நம்முடன் உரையாட
வரும் போது
பதில் பேசாது போனால்
தனித்து விடப் படுவோம்
பயந்த கோழைகளாய் நாம்
தவிர்க்கும்
இந்த வாழ்விலே !
வாழ்வை வீணாக்கு பவளே !
வாசற் கதவைத் திற !
உன் இதயத்தில்
உள்ள முடிச்சை அவிழ்த்துப்
பறந்து போ
இந்தப் பூமி வழியே
என் குருதியும் உன் குருதியும்
எடுத்துக் கொண்டு !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 30, 2009)]
- கலில் கிப்ரான் கவிதைகள் காதலியோடு வாழ்வு << குளிர் காலம் >> கவிதை -2 (பாகம் -4)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>
- உயிர்க்கொல்லி – 1
- Tamil Literary Seminar at Yale University
- எழுத்தாளர்விழாவில் தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்கு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தேர்வும் சிறுகதைக் கருத்தரங்கமும்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -3
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்…
- தார்மீக வேலிகள்
- கடந்த வாரத்திய மொழிபெயர்ப்பு கதை குறித்து
- வந்து போகும் நீ
- சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை
- “எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
- யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்
- கந்த உபதேசம்
- இன்னொரு சுதந்திரம் வேண்டும் !
- அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!
- விவரண வீடியோப் படக்காட்சி
- நர்கிஸ் மல்லாரி நாவல் கட்டுரைப் போட்டி முடிவுகள்
- அன்புள்ள ஜெயபாரதன்
- ஓட்டம்
- பாலம்
- கழிப்பறைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்பது இரா.முருகன்
- உயிர்க்கொல்லி – 2
- “பிற்பகல் வெயில்”
- என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2
- நினைவுகளின் தடத்தில் – (28)
- சதாரா மாலதி
- சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வியல் வரைபடம்
- திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா
- சிட்டுக்குருவி
- வேத வனம் விருட்சம் 30
- கவிதையை முன்வைத்து…
- கவிதை௧ள்
- பாரி விழா
- ஐந்து மணிக்கு அலறியது
- புத்தகச் சந்தை