கவிதை௧ள்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

செல்வராஜ் ஜெகதீசன்




01
கொஞ்சமும்…

கொஞ்சமும்
எதிர்பார்த்திருக்கவில்லை
தேநீர்க் குவளையை
வைக்கும் ஸ்டாண்டாக
ஒரு கவிதை புத்தகத்தை
வைத்திருப்பார்
அந்த புத்தகக் கடைக்காரர்
என்று.


02
சாயல்…

இரு தளங்களுக்கிடைப்பட்ட
படிக்கட்டுகளில் வைத்து
காதலைச் சொன்ன கணம்
விழிகள் உருட்டி
மருண்ட உன் முகத்தின்
சாயலேதுமின்றி
இருந்தது
பிரிவதற்காய் நாம்
தேர்ந்து கொண்ட ஒரு
பிற்பகல் வேளையில்
மூடிய லிப்டின் கதவுகள்
உள் வாங்கிப்போன
உன் முகம்.

03
உதவும் பொருட்டு…

லிப்டில்
ஏறிய ஒருவனுக்கு
உதவும் பொருட்டு
விரைவாய் மூடும்
பொத்தானை அழுத்தினேன்.
அதுவரை பேசிக்கொண்டிருந்த
அவன் அலைபேசியின்
தொடர்பு விட்டுப் போனது.


Series Navigation

author

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

Similar Posts