தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
மூழ்கி விடுகிறாய் நீ சில வேளை
ஆழ்ந்த மௌனக் குழிக்குள்
வீழ்ந்து கொண்டு !
கர்வக் கோபத்தில்
தத்தளித்து நீ
மீண்டு வருவது அபூர்வம்
உன் பிறவி அடிப்படையின்
மிச்சங்கள்
இன்னும் மேலெழுந்து
வந்திடும் உனக்கு !
என்னருமைக் காதலி ! நீ
என்ன காண்கிறாய்
உன் மூடிய கிணற்றில் ?
கடற்பாசிகள்
சதுப்புநிலச் சேறு, பாறைகள் ?
கசப்போடு
காயப் பட்டு
குருட்டுக் கண்களில் நீ
காண்பது என்ன ?
காண முடியாது கண்மணி !
எதனையும்
தவறி நீ வீழ்ந்த
கிணற்றுக்குள் !
பனித்துளி மேவும்
மல்லிகைப் பூங்கொத்து,
பள்ளத்தை விட
ஆழ்ந்த ஒரு முத்தம்,
உனக்காக நான்
உயரத்தில் வைத்தேன் !
அஞ்ச வேண்டாம்
எனைக் கண்டு நீ !
வெறுப்புக் கிணற்றில் நீ
விழ வேண்டாம்
மறுபடியும் !
உலுக்கி விடு
உன்னைக் காயப் படுத்த
வந்திடும்
என் வார்த்தையை !
வெளியே றட்டும் அது திறந்த
பலகணி வழியாக !
வந்திடும் அது
என்னைக் காயப் படுத்த நீ
உந்தி அனுப்பாமல் !
கடுப்பூட்டும் அச்சொற்கள்
விடுவிப் படையும் என்
நெஞ்சை விட்டு !
புன்னகை புரி ஒளியோடு
என் வாய் உன்னைக்
காயப் படுத்தினால் !
தெய்வக்
கதைகளில் வந்திடும்
கதா நாயகன் போல்
ஆடுகள் மேய்க்கும்
நானொரு சாந்த
மானிடன் இல்லை !
நல்ல மரவெட்டி !
மண்ணை, காற்றை மற்றும்
மலைக்காடு முட்களை
பகிர்ந்து கொள்பவன்
உன்னோடு !
என்னை நேசிப்பாய் நீ !
புன்னகை புரி
என்னை நோக்கி !
உதவி செய் எனக்கு நான்
உத்தமனாக !
என்னுள் இருக்கும்
உன்னைக்
காயப் படுத்திக் கொள்ளாய் !
எனெனில்
ஏது பயனு மில்லை !
என்னையும்
காயப் படுத்திச் செல்லாய்
நீயும்
காயப் பட்டுக்
கொண்டதால் !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 23, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் உப்புநீர்க் குளம் பெர்குலரேட் உப்பு & மீதேன் வாயு கண்டுபிடிப்பு !
- என் மகள் N. மாலதி – (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 1
- சுப்ரபாரதிமணியனின் ” திரைவெளி “
- கம்ப இயக்கம் கம்பனடிப்பொடி (நூறாண்டு காணும் தமிழறிஞர்)
- காரைக்குடி கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாவும் கம்பன் திருநாள் விழாக்களும் (ஏப்ரல் 5 முதல் 9 வரை)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் << மரணமே கவிஞன் வாழ்வு >> கவிதை -4
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (3)
- மரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை மலர்ச்செல்வனின் “தனித்துத் திரிதல்”
- நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்
- இன்னொரு சைக்கிள் ஒட்டியும் பின்னொரு சிறுவனும்…
- விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …
- சுயமில்லாதவன்
- சங்கச் சுரங்கம் — 7 : மையணல் காளை
- புதுமைப்பித்தனை முன்வைத்து வெ.சா.வின் வில்லங்கம்
- தமிழ் கற்பித்தல் திட்டம்
- தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)
- வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்
- நேசத்துடன் காதலுக்கு
- மன்னிப்பு
- திரிசங்கு சொர்க்கம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தெட்டு
- “ மனித நகர்வும் இரண்டாவது பிளவும் ”
- சேன் நதி – 1
- சேன் நதி – 2
- காங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம்
- மறுசிந்தனையில் இஸ்லாமிய கருத்தாடல்கள்
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- உலகத் தீரே! உலகத் தீரே!
- நிலவற்ற மழை இரவில்
- மனதின் கையில்… .. ..
- வேத வனம் விருட்சம் 29
- அந்த இரவு