தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
புண்படுத்தி விட்டேன் உன்னை
என் கண்மணி !
துன்புறுத்தி விட்டேன் கிழித்து
உன் ஆத்மாவை !
புரிந்து கொள்
என்னைச் சரியாய் !
அறிவார் என்னை
ஒவ்வொரு நபரும்
நன்றாய் !
“நான்” என்னும் தனித்துவமும்
நான் உனது
நாயகன் என்னும்
நேயமும் சேர்ந்திருக்கும் !
என் நடத்தை தடுமாறிப் போனது
உன்னிடம் !
ஏறி இறங்கும்
எனது மோகத் தீ !
எல்லாப் பிராணிகள் போல
என்னைப் பலவீனனாய்க்
காண்பது
உன் உரிமைப் பாடு !
உணவு பண்ணி
இசைக் கருவி மீட்டும்
உன் மெல்லிய கரங்கள்
தடுக்க வேண்டும்
என்னை
இதயம் சண்டைக்கு
ஏகும் போது !
ஆதலால் நான் நாடுகிறேன்
நிலைத்த
சிலையாக உன்னை !
உன் குருதியில் நனைந்து
என் இரும்புக் கரங்கள்
உறுதியை தேடு கின்றன
உன்னிடம் !
உனது ஆழ்ந்த சிந்தனை
எனக்குத் தேவை !
உனது வெண்கலச் சிரிப்பு
எனக்குக் கேட்டால்,
எனது கடூர நடத்தைக்குக்
காரணம்
ஏது மில்லை என்றால்,
ஏற்றுக் கொள் நீ
போற்றத் தகுந்தவளே !
எனது துயரத்தை
என் சினத்தை !
மன்னித்திடு
உன்னை மெல்ல அழிக்கும்
என் பகையாளிக் கைகளை !
களிமண்ணில் உருவாகி
வெளியே வருவாய் எனது
போராட்டங் களுக்காக
புதுப்பித் துன்னை !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 16, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்
- 2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது
- வரலாற்றில் பெண்கள்
- ஒரு கார்ட்டூன் சித்திரக்காரனின் திட்டமிட்ட மரணம்
- கடவுளின் பசி/பகட்டு நாகரிகமும் சன்னாசி கிழவனும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -28 << உன்னைப் புண்படுத்தினேன் ! >>
- நான் கடவுள் – உலகப் பார்வையில்
- ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பு
- சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு
- சங்கச் சுரங்கம் – 6 : பொருநர் ஆற்றுப்படை
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம்: (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)
- ஷாஜகானும் மும்தாஜும் காமெடியும்
- நீளும் விரல்கள்…
- மீண்டும் ஒருமுறை
- எதிர்கொள்ளுதல்
- வெளிச்சம்
- பிங்கி
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -5 பாகம் -1
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தேழு
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (2)
- ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்!!
- பாரதி மணி என்னும் பன்முக ஆளுமை
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 5- ஆ. இரா. வேங்கடாசலபதி
- வேத வனம் விருட்சம் 28
- கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -2)
- நிமிடக்கதைகள்