கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -2)

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Self-Portrait of Kahlil Gibran

என்னிதயம் நடந்து சென்று அன்புக்கும் அழகு மயத்துக்கும் மகளான ஞானக் களஞ்சியத்தைக் கேட்டது : “எனக்கு ஞானத்தை அளித்திடு, பிற மக்களுக்கு நான் அதைப் பகிர்ந்து கொள்ள.” அதற்குப் பதில் கிடைத்தது : “ஞான மென்று சொல்லாதே ! ஆனால் சொத்தென்று கேள் ! எனென்றால் மெய்யான சொத்து வெளிச் சூழலிருந்து வருவதில்லை ! புனிதத்திலும் புனிதமான வாழ்விலிருந்து ஆர்ம்பமாகிறது. உன் அனுபவத்தை மற்ற மக்களோடு நீ பகிர்ந்து கொள்.”

கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)

“நீ மௌன நதியிலிருந்து நீர் அருந்துகிற போதுதான் மெய்யாகப் பாட முடியும். நீ மலைச் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போதுதான் நீ மேலேறத் துவங்குகிறாய். இந்தப் பூமித் தளம் உன் பாதங்களை உரிமை கொள்ளும் போதுதான் நீ மெய்யாக நாட்டியம் ஆட முடியும்.”

கலில் கிப்ரான் (1883-1931)

“மனிதரை, அவரது சந்ததிகளை, மனிதரின் விதிகளை, அவரது உபதேசங்களை, கருத்துகளை, அவரது ஆரவாரத்தை மற்றும் புலம்பலைத் தவிர்ப்பதற்கே அல்லாமல், நான் மதத்தின் பொருட்டு ஏகாந்தத்தைத் தேடவில்லை.”

கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)

<< அலையின் கீதங்கள் >>

நடனம் ஆடினேன்
நான் பன்முறைக்
கடற் கன்னிகளைச் சுற்றி வந்து
ஆழ்கடல் உள்ளிருந்து
மேலேறி !
பாறை மீதமர்ந் தேன்
தாரகைகள் நோக்கிட !
என்னிடம் காதலர்
பன்முறைப் புகார் செய்வதைக்
கேட்டுளேன்
தாம் குள்ளமாய் உள்ளதை !
ஆறுதல் கூறுவேன்
அவர்க்கு மனச்
சோர்வுகள் நீங்கிட !

பாடுபடுத்துவேன் பாறைகளைப்
பன்முறை !
புன்முறுவ லோடு
தடவிக் கொடுப்பேன் !
ஆயினும் அவை
நன்றியுடன் எனைக் கண்டு
நகைப்ப தில்லை !
மூழ்கிடும் ஆத்மாக்களைத்
தூக்கி வந்து
பன்முறைப் பரிவுடன்
அன்புக்கரை சேர்த்தேன் !
ஆத்மாக் களுக்கு
மன உறுதி அளிக்கும்
கடற்கரை என்
உடற் சக்தி எடுத்து !

விலை மதிப்பில்லா
ஒளிக் கற்களைக் களவாடிப்
பன்முறை
அன்புக் கரைக்குப்
பரிசாய் அளித்தேன் !
மௌன மாக
எடுத்துக் கொண்டான் !
நானின்னும் கொடுத்தாலும்
வாங்கிக் கொள்ள
தயக்க மிஇல்லை
எப்போதும் !

நடுநிசிப் பொழுதில்
உயிர்ப் பிராணிகள் எல்லாம்
ஆழ்ந்த உறக்கத்தை நாடி
மூழ்கிப் போன வேளையில்
அமர்ந் திருந்தேன் நான்
பாடிக் கொண்டு
ஒரு சமயம் !
பெரு மூச்சை விட்ட படி
மறு சமயம் !
உறக்க மில்லை எப்போதும்
எனக்கு மட்டும் !

எழுப்பி விட்ட தென்னை
ஐயகோ ! எனது
விழிப்புத் தன்மை !
ஆயினும்
மனித நேயன் நான்
சத்தி யத்தைக்
காதலிக்கும்
சித்த வலு பெற்றவன் நான் !
களைத்துப் போயினும்
ஒருபோதும்
மரண மில்லை
எனக்கு !

++++++++++++++

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 17, 2009)]
கலில் கிப்ரான் கவிதைகள்
<< அலைகளின் கீதங்கள் >>

கவிதை -3 (பாகம் -2)

மூலம் : ஓவியக்கவி கலீல் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னிதயம் நடந்து சென்று அன்புக்கும் அழகு மயத்துக்கும் மகளான ஞானக் களஞ்சியத்தைக் கேட்டது : “எனக்கு ஞானத்தை அளித்திடு, பிற மக்களுக்கு நான் அதைப் பகிர்ந்து கொள்ள.” அதற்குப் பதில் கிடைத்தது : “ஞான மென்று சொல்லாதே ! ஆனால் சொத்தென்று கேள் ! எனென்றால் மெய்யான சொத்து வெளிச் சூழலிருந்து வருவதில்லை ! புனிதத்திலும் புனிதமான வாழ்விலிருந்து ஆர்ம்பமாகிறது. உன் அனுபவத்தை மற்ற மக்களோடு நீ பகிர்ந்து கொள்.”

கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)

“நீ மௌன நதியிலிருந்து நீர் அருந்துகிற போதுதான் மெய்யாகப் பாட முடியும். நீ மலைச் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போதுதான் நீ மேலேறத் துவங்குகிறாய். இந்தப் பூமித் தளம் உன் பாதங்களை உரிமை கொள்ளும் போதுதான் நீ மெய்யாக நாட்டியம் ஆட முடியும்.”

கலில் கிப்ரான் (1883-1931)

“மனிதரை, அவரது சந்ததிகளை, மனிதரின் விதிகளை, அவரது உபதேசங்களை, கருத்துகளை, அவரது ஆரவாரத்தை மற்றும் புலம்பலைத் தவிர்ப்பதற்கே அல்லாமல், நான் மதத்தின் பொருட்டு ஏகாந்தத்தைத் தேடவில்லை.”

கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)

<< அலையின் கீதங்கள் >>

நடனம் ஆடினேன்
நான் பன்முறைக்
கடற் கன்னிகளைச் சுற்றி வந்து
ஆழ்கடல் உள்ளிருந்து
மேலேறி !
பாறை மீதமர்ந் தேன்
தாரகைகள் நோக்கிட !
என்னிடம் காதலர்
பன்முறைப் புகார் செய்வதைக்
கேட்டுளேன்
தாம் குள்ளமாய் உள்ளதை !
ஆறுதல் கூறுவேன்
அவர்க்கு மனச்
சோர்வுகள் நீங்கிட !

பாடுபடுத்துவேன் பாறைகளைப்
பன்முறை !
புன்முறுவ லோடு
தடவிக் கொடுப்பேன் !
ஆயினும் அவை
நன்றியுடன் எனைக் கண்டு
நகைப்ப தில்லை !
மூழ்கிடும் ஆத்மாக்களைத்
தூக்கி வந்து
பன்முறைப் பரிவுடன்
அன்புக்கரை சேர்த்தேன் !
ஆத்மாக் களுக்கு
மன உறுதி அளிக்கும்
கடற்கரை என்
உடற் சக்தி எடுத்து !

விலை மதிப்பில்லா
ஒளிக் கற்களைக் களவாடிப்
பன்முறை
அன்புக் கரைக்குப்
பரிசாய் அளித்தேன் !
மௌன மாக
எடுத்துக் கொண்டான் ! ஆ
ஆநானிஆன்னும் கொடுத்தாலும்
வாங்கிக் கொள்ள
தயக்க மிஆல்லை
எப்போதும் !

நடுநிசிப் பொழுதில்
உயிர்ப் பிராணிகள் எல்லாம்
ஆழ்ந்த உறக்கத்தை நாடி
மூழ்கிப் போன வேளையில்
அமர்ந் திருந்தேன் நான்
பாடிக் கொண்டு
ஒரு சமயம் !
பெரு மூச்சை விட்ட படி
மறு சமயம் !
உறக்க மில்லை எப்போதும்
எனக்கு மட்டும் !

எழுப்பி விட்ட தென்னை
ஐயகோ ! எனது
விழிப்புத் தன்மை !
ஆயினும்
மனித நேயன் நான்
சத்தி யத்தைக்
காதலிக்கும்
சித்த வலு பெற்றவன் நான் !
களைத்துப் போயினும்
ஒருபோதும்
மரண மில்லை
எனக்கு !

++++++++++++++

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 17, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts