தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
முடிவில்லா நீடிப்புள்ள ஆத்மா பூர்த்தி பெறுவதில்லை ! அது பூரணத்தைத் தேடி எப்போதும் செல்கிறது ! பிறகு என்னிதயம் எழில்மய வாழ்வை நோக்கிக் கேட்கிறது : “நீயே எல்லா ஞானக் களஞ்சியம் ! பெண்ணின் மர்மத்தை எனக்குத் தெளிவு செய் !” அது பதில் அளித்தது. “ஓ மனித இதயமே ! பெண் என்பவள் உனது மனப் பிரதிபலிப்பே ! நீ எப்படி உள்ளாயோ அவள் அப்படி இருக்கிறாள் ! எங்கெல்லாம் நீ வசிக்கிறாயோ அங்கெல்லாம் அவள் வாழ்கிறாள் ! அறிவில்லாதவர் விளக்காத மதத்தைப் போன்றவள் அவள் ! முகில் மறைக்காத ஒரு நிலவைப் போன்றவள் ! மாசில்லாத் தென்றலைப் போன்றவள் !”
கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)
Fig. 1
Kahlil Gibran’s Paintings
My Sweetheart
“அனுதினம் நீ வாழும் வாழ்க்கையே உனது ஆலயம் ! உனது மதம் !
கலில் கிப்ரான் (1883-1931)
“துயர்களை ஒருபோதும் நேராக நோக்காதவன், மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்.”
கலில் கிப்ரான் (கண்ணீரும் சிரிப்பும்)
“எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மேற்தளக் காற்றில் பறந்து நான் கற்பனை உலகில் மிதந்தேன் ! ஆங்கே தெய்வீக ஒளிவீசும் வட்டாரத்தோடு நெருங்கி இருந்தேன் ! இங்கே நான் பொருளாயுதச் சிறையில் கிடக்கிறேன் !
கலில் கிப்ரான்
<< அலையின் கீதங்கள் >>
உறுதியுள்ள கடற்கரை என்னரும் நாயகன் !
நானவள் ஆசை நாயகி !
இறுதியில் இருவரும் இணைந்தோம் காதலால் !
நிலவென்னை இழுக்கும் அவனிடமிருந்து !
நெருங்கிப் பிறகு பிரிவேன்
வெறுப்புடன் பிரியா விடை
பெறுவேன் சிறிது சிறிதாய் !
விண்ணீலத் தொடுவானின்
பின்புறம் ஒளிந்து விரைவேன்
என்னுடை வெண்ணிற நுரைகள் அவன்
பொன்னிற மணல்மேல் தெளிக்கும் !
பின்னிக் கலப்போம் ஒன்றாய்
உருகிக் குவிந்த சுடர் ஒளியில் !
அலைகளின் தாகத்தைத் தணித்து
அதனுடை மோகத்தைத் தீர்ப்பேன் !
எனது குரல் ஒலி மிதமாகும்
எனது கோபம் அடங்கிப் போகும் !
பொழுது வெளுத்ததும் காதல் விதிகளைப்
பூஜித் திடுவேன் அவன் காதில் !
தழுவிடு வான் அவன் என்னை
நீடித்த இச்சை யோடு !
மாலையில் நம்பிக்கைக் கீதம் இசைப்பேன்
மெல்லிய முத்தம் அவனுக்கு முத்திரையாய்
முகத்தில் இட்டுப் பயந்து நகர்வேன் !
அமைதியாய் பொறுமையில் அவனோ
சிந்தித் திடுவான் ! என் சீற்றத் துக்கு
அடைக்கலம் தரும் அவன் பரந்த மார்பு !
அலைகள் மீளும் போது நாமிருவர்
தழுவிக் கொள்வோம் ஒருவரை ஒருவர் !
அலைகள் நீங்கும் போது அவன் கால்
அடியில் வீழ்வேன் நான் பூஜித்து !
++++++++++++++
(தொடரும்)
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 9, 2009)]
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -4 பாகம் -4
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! புதிய பூமிகளைத் தேடிப் போகும் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி !(கட்டுரை 55)
- கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -1)
- பம்பரக்கோனே !
- மூவரின் நூல்கள் வெளியீடு
- எனது பயம் மற்றும் நானற்ற என்னுடைய இது
- வெள்ளநிவாரணம்
- கருணையும் கவிதையும்
- “அநங்கம்” இதழ்
- இலக்கியத் தோட்டம் : தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது : பரிந்துரைக்கான அழைப்பு
- தமிழ் ஸ்டுடியோ.காம் உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்
- சொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளம்
- சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த கலந்துரையாடல்
- வாக்குச்சீட்டில் வேட்பாளரின் படம்
- எச்சரிக்கை வேண்டுகோள்!
- அநங்கம் ஆய்வரங்கம்
- போர்முனை இரவுகள்
- வேறு ஒன்றும்…
- சுமந்தும் சார்ந்தும்…
- சங்கச் சுரங்கம் -5 ; மடலும் ஊர்ப
- திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி
- திருக்குறளில் ஊழியல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தாறு
- புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை
- மக்களைத் திசை திருப்பும் கூட்டம்!
- பேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள்
- நினைவுகளின் தடத்தில் – (27)
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- தலைகீழாய் எரியும் ஜின்கள்
- நண்பர்கள்
- இருள் கவியும் முன் மாலை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -27 << காதலிக்கு ஒரு கேள்வி >>
- வேத வனம் விருட்சம் 27
- கருணையும் கவிதையும் – புரந்தரதாசர் பாடல்கள்
- எதேச்சதிகாரம்
- மனிதன் என்று
- நீ….!