தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
காதலி உன்னைச் சீர்குலைத்தது
ஒரு கேள்வி !
மீண்டும் வந்தேன் உன்னிடம்
முள்ளான ஐயமுடன் !
வாளைப் போல் நேராக நீ
வந்திட விழைகிறேன் !
அல்லது உன் பாதை நேராக
அமைய வேண்டும் !
ஆயினும் நான் விரும்பாத
ஓர் நிழலை
முடுக்கு மூலையில் நீ
வைத்திருக்க வற்புறுத்துவாய் !
என் கண்மணி !
புரிந்துகொள் என்னை
உன்னை முழுமையாய் நான்
காதலிக் கிறேன்
கண்கள் முதல் கால்கள் வரை
ஒளிச் சுடராய் வைத்துள்ள
உன் உள்ளழகை !
உன் கதவைத் தட்டுவது
நான்தான்
என் கண்மணி !
அது பேயில்லை !
உன்னை ஒரு சமயம்
ஜன்னல் வழியாய்த்
தடுத்து நிறுத்திய ஒன்றில்லை !
கதவை உடைத்துத்
தள்ளி விட்டுப்
புகுந்தேன் உன் வாழ்வில் !
உன் ஆத்மா வுக்குள் வாழக்
குடி புகுந்தேன் !
ஆனால் என்னோ டிசைந்து
வாழ முடிய வில்லை
உன்னால் !
ஒவ்வொரு கதவாக நீ
திறக்க வேண்டும்
என் ஆணைக்குக் கீழ்ப் படிந்து !
திறந்திடு உன் கண்களை !
தேட வேண்டும் நான்
அவற்றுக் குள்ளே !
தடதட வென்று ஒலிக்கும்
என் கால்
எட்டு வைப்புகள்
பாதை நெடுவே
எப்படி உள்ள தென
எட்டிப் பார்க்க வேண்டும் நீ !
அஞ்ச வேண்டாம் நீ
உனக்கு உரியவன் நான் !
ஆயினும் நானொரு
வழிப் போக்கன் அல்லன்
பிச்சை எடுப்பவனும் அல்லன் !
நீ காத்திருந்த
உன் எஜமானன் நான் !
இப்போது நான் நுழைகிறேன்
உன் வாழ்க்கையில் !
தேவை இல்லை வேறெதுவும்
காதலி ! காதலி ! காதலி !
அங்கு நான்
தங்குவதைத் தவிர !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 9, 2009)]
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -4 பாகம் -4
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! புதிய பூமிகளைத் தேடிப் போகும் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி !(கட்டுரை 55)
- கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -1)
- பம்பரக்கோனே !
- மூவரின் நூல்கள் வெளியீடு
- எனது பயம் மற்றும் நானற்ற என்னுடைய இது
- வெள்ளநிவாரணம்
- கருணையும் கவிதையும்
- “அநங்கம்” இதழ்
- இலக்கியத் தோட்டம் : தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது : பரிந்துரைக்கான அழைப்பு
- தமிழ் ஸ்டுடியோ.காம் உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்
- சொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளம்
- சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த கலந்துரையாடல்
- வாக்குச்சீட்டில் வேட்பாளரின் படம்
- எச்சரிக்கை வேண்டுகோள்!
- அநங்கம் ஆய்வரங்கம்
- போர்முனை இரவுகள்
- வேறு ஒன்றும்…
- சுமந்தும் சார்ந்தும்…
- சங்கச் சுரங்கம் -5 ; மடலும் ஊர்ப
- திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி
- திருக்குறளில் ஊழியல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தாறு
- புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை
- மக்களைத் திசை திருப்பும் கூட்டம்!
- பேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள்
- நினைவுகளின் தடத்தில் – (27)
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- தலைகீழாய் எரியும் ஜின்கள்
- நண்பர்கள்
- இருள் கவியும் முன் மாலை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -27 << காதலிக்கு ஒரு கேள்வி >>
- வேத வனம் விருட்சம் 27
- கருணையும் கவிதையும் – புரந்தரதாசர் பாடல்கள்
- எதேச்சதிகாரம்
- மனிதன் என்று
- நீ….!