தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
காதல் ஒரு பயணம்
கடலோடு விண்மீனோடு
மூச்சு முட்டும் வாயு வோடு
சூறாவளித் தூசி யோடு
பின்னிய
மின்னல் அடிப்புக்கள் தான்
காதற் பயணம் !
ஈர் உடல்களை இளகச் செய்யும்
ஒற்றைத் தேன் அமுது !
முத்தம் முத்தமாய் ஈந்து
பயணம் செய்கிறேன்
முடிவில்லா
உன் சிற்றுலகில்
உனது வேலிகளில்
உனது நதிகளில்
உனது சிற்றூர்களில்
உனது ஜனன
உறுப்புக் கனல் சுவையில்
ஊறிப் போய்
மாறிப் போய் !
++++++++++++++++
<< நானின்றி நீ மடிவாய் >>
மறுபடியும் உன்கால் பாதம் எனைக்
புறக்கணித்துச் சென்றால்
அப்பாதம்
அறுத்து விடப்படும் துண்டாய் !
வேறு பாதைக்கு உன்கை உன்னை
இழுத்துச் சென்றால்
அந்தக் கை
அழுகிப் போய்விடும் வீணாய் !
என்னிட மிருந்து உன் வாழ்வை
முறித்துக் கொண்டால்
மரணமே உனக்கு
உயிருடன் நீ வாழ்ந் தாலும் !
நீடித்த மரணத்தில் கிடப்பாய் !
நீ அல்லது
நிழலாய் நகர்வாய்
நானில் லாத இந்தப் பூமியில் !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 2, 2009)]
- நாடற்றவன் பேசிக்கொண்டிருக்கிறான்
- நான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா ? (கட்டுரை 54 பாகம் -1)
- “தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”
- எளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”
- இழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”
- திரு. அப்துல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது
- ” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்
- இணையப்பயிலரங்கு
- அறிவோர் கூடல் நிகழ்வு
- அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா
- கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்
- தீர்ப்பு எழுதும் கலம்கள்
- நெருடல்கள்
- வேத வனம் விருட்சம் 25
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3
- ”கண்ணி நுண் சிறுத்தாம்பு”
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா
- இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்
- தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )
- கவலைகிடமான மொழிகளின் நிலை
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)
- சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- விடுபட்டவை
- முகமூடி
- நானும் முட்டாள் தான்
- சொல்லி முடியாதது
- தமிழ்!
- வேண்டும் சரித்திரம்