தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இசைபோல் செடிபோல்
இந்த அழகி
மென்மை யானவள் !
வைரம், பஞ்சு, கோதுமை,
பீச் கனி வழியாக
ஒளி ஊடுருவி உருவாக்கிய
ஓர் உயிர்ச் சிலை அவள் !
இப்போது அனுப்புகிறாள்
வெளியே
அலைகளின் மீது
அவளது
புதிய நறுமணத்தை !
வெய்யில் பதம் படுத்திய அவள்
பாதத் தடங்களை
மணலில் அச்செடுத்துக்
காட்டும்
கடல் அலை நீரடிப்பு !
இப்போ தவள்
பெண் நெருப்பில் மலர்ந்த
ஒரு ரோஜா !
உதய சூரியனைக் கடலைப்
பந்தயத்தில் எதிர்க்கும்
ஒரு நீர்க் குமிழி !
ஏதொன்றும் தொடுவ தில்லை
உன்னை
குளிர்ந்த உப்பினைத் தவிர !
தொடர்ந்து வரும் வசந்த
காலத்தைக்
காதலும் பாதிக்காது !
முடிவில் லாத கடல் நுரை
எதிரொலிக்கும்
வனப்பு மங்கை அவள் !
உனது சிற்ப இடுப்பானது
அன்னத் துக்கும்
மல்லிகை மலருக்கும்
புத்தளவை உண்டாக்கும்
உன் உடற் கட்டுப்
பளிங்கு நீரிலே
மிதக்கும் போது
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 2, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 22
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
- என் காது செவிடான காரணம்
- மோந்தோ -3-2
- ஒரு நேசத்தின் மிச்சம்
- நாகேஷ் – ஒரு கலை அஞ்சலி
- உள் பயணம்
- அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
- சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை
- ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்
- தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.
- பகத்சிங் நூற்றாண்டு விழா பொங்கல் விழா
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3
- காந்தியின் மரணம்
- நாகேஷ்
- ஏதேதோ…
- திருப்புமுனை -1
- திருப்புமுனை – 2
- “மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”
- பரிமள விலாஸ்
- தட்சணை
- சிநேகிதனைத் தொலைத்தவன்
- மோந்தோ -3 – 1
- ஆறாம் விரலும் புகை மண்டலமும்
- இரயில் பயணங்களில்
- சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- சாத்தான்களின் உலகம்
- மெளனமாய் இருந்ததில்லை கடல்.
- பேச்சுத்துணை…
- எல்லைகள் இல்லா உலகம்