அந்த இரவை போல்

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

வே பிச்சுமணி



நிலவு கிணற்றில்
ஒளிநீரை
அரை மாதங்களாய்
இரைத்து இரைத்து
தூர்த்து அம்மாவாசையில்
வெளியே
குதித்த வீன்மீன்கள்
சிம்னிவிளக்குகள் போல்
துயில்கின்றன
நீ எனை பிரிந்த
அந்த இரவை போல்

Series Navigation

author

வே பிச்சுமணி

வே பிச்சுமணி

Similar Posts