வே பிச்சுமணி
ஒட்டஞ்சில் சொல்லும்
பரணி ஆற்றில் பள்ளிகூடம் போகாமல்
சட்டையும் அரைகால்சட்டையும் அவிழ்த்து
பாறை மீது வைத்து பறக்காதிருக்க கூழங்கல்லும் வைத்து
அம்மணமாய் ஈட்டியாய் நீரில் பாய்ந்து
குதியாட்டம் போட்டு பல்டி அடிக்க போய்
காதில் மணலும் மூக்கில் தண்ணீரும் புகுந்து
விரல்களில் தசைகள் சுருங்கி கண்கள் சிவந்து போக
கண்கள் சிவப்பு போக்க ஒட்டஞ்சில் ஒத்தடமும்
விளையாடிவிட்டு வருவதாக காண்பிக்க புழுதி தடவி
மூக்கில் முட்டையிடும் சளி காட்டி கொடுக்க
அரட்டி சிந்த சொல்லி சிந்தா மூக்கை பிடித்து
சிந்தி சிந்தி ஒரு பக்கம் சாய்வாய் என் மூக்கு
ஆனாலும் திருட்டுதன குளியல் தொடர
ஆற்று நீரும் மூக்குக்கு பழகி போனதும்
ஒட்டஞ்சில்லில் தவளை விட்டு மகிழ்ந்ததும்
பூட்டிய குளியலறையில் வாசனை சோப்பு போட்டு
குளித்தாலும் அந்தகுளியல் சுகம் என்றும் வராது
இன்றும் ரோட்டில் எப்பவாது காணும்
ஒட்டஞ்சில் சொல்லும்
சூட்டு ஒத்தடத்தையும்
ஆற்று நீர்பரப்பில் தவளை விட்டதையும்
மகிழ்ச்சிக்காக குளித்ததையும்
உன் பெயர் உச்சரிக்கையில்
விழா மேடையில் உன் பெயர்
உச்சரிக்கையில் முகம் சாய்த்து
வெட்கத்துடன் மூன்றாம்பிறையாய்
இதழ் விரித்து நீ புன்னகைக்க
என் முகமும் பிரதிபலிக்க
விழாவுக்காக ஒரு புல் கூடபுடுங்காம
என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு
என என் மனசாட்சி-
கீழ்வானம் சிவக்க
புல் இனங்கள் துயில் எழவில்லையா
அவள் பெயரின் ஒலி என்னுள்
காதலாய் பரவி என் இதழ் விரிக்காதா
பரமனின் உடுக்கை நாதத்தில
உயிர்கள் பிறந்ததாய் மெய்ஞானம்
எரிமலையின் வெடிசத்தத்தில்
பிறந்ததாய் விஞ்ஞானம்
உன் பெயரின் ஒலியில்
நான் பிறந்ததாய் என்ஞானம்
நான்மறைகளும் காற்றில் ஒலியாய்
இன்றும் உள்ளதாக நம்பிக்கை
உன் பெயரின் ஒலியில்
என் நாளும் என் இருக்கை
பெயர்களின் ஒலி வலிமையை
அனுமனுக்கு பின் நானறிவேன்
உன் பெயர் உச்சரிக்க படும்பொழுது
எல்லாம் உயிர்ப்பிக்கபடுகிறேனே
எனது ராமஜெயம் உன் பெயர்தானே
உன் பாட்டியின் பெயர் உனக்கு
உன் தந்தை சூட்டிய காரணம்
இப்போதான் விளங்கிறது
என் மூலம் ஊரிலும் தெருவிலும்
புது பேனா எழுதும் முதல்
பரிசோதனை வார்த்தையாய்
என் கை எழுதும் உன் பெயர்
உன் பெயர் உச்சரிக்கபடும் போதெல்லாம்
என் கண்கள் உனை தேடும் எல்லாஇடத்திலும்
உன் பெயர் சூட்டிய
சின்ன குழந்தைகளின் கன்னம்
செல்லமாய் தடவும் என் கைகள்
உன் பெயர் சூட்டிய
பாட்டிமார்களுக்கு பாதை கடக்க
உதவும் என் கால்கள்
மொழி பாடங்களில் எழுதும்
கடிதங்களின் முகவரியில்
எல்லாம் உன் பெயர்
என் மின்னஞ்சல் முகவரியின்
கடவுசொல்லாக மட்டும்
உன் பெயரை வைக்கவில்லை
என்னை நீ கடவு செய்யகூடாதென
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை !>>
- தாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே !
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1
- கொற்றவை படைத்த ஜெயமோகன்
- ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்
- அழகியலும் எதிர் அழகியலும்
- தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’
- கவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு
- தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு
- எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”
- பயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- விதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்
- நினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு
- பொங்கல் வாழ்த்துகள்
- உயிர்ப்பிக்கும் ஏசுநாதர்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று
- தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்
- சூரியன் வருவான்
- கோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா?
- நினைவில் எம்.ஜி.ஆர்
- தேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை
- யமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்
- பெருந்துயரின் பேரலை
- பொம்மை நேசம்
- கொடுமையிது! அறக்கொலையே
- கவிதைகள்
- பிறப்பு…
- வேத வனம் விருட்சம் 19
- ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே
- கஜினி Vs கஜினி
- சூரிய ராகம்