தாஜ்
அக்கரைக் காட்சி
அவர்கள் பெருத்துவிட்டார்கள்
மனிதர்களின் மாற்றாய்
நிஜங்களின் நிழலாய்
நகர வீதிகளின் அங்கமென
நடமாடும் அவர்கள்
லோக காப்பாளர்களால்
கல்லடிப் படும்வரை
அடையாளம் தெரிவதில்லை.
நான் காலாறும் இடமெல்லாம்
கேலிச் சிரிப்போடு
சகஜமான அவன்
நேர் நின்றதோர் நேரம்
முகம் பார்த்து கையெந்த
இக்கரையிலிருந்து
கருணையோடு பார்த்தேன்
என் பார்வையை
அவனும் பார்த்தான்!
பக்கத்தில் வந்து
கண்பார்க்க
கைகளில் இருந்ததை
தட்டிப் பறித்தன
அவைகள்!
சிலர் வீசியெறிந்ததை
பொறுக்கிய வேகத்திலும்
குட்டிகளைச் சுமந்தே
மலையேறின.
கொடிகளைப் பற்றியவைகள்
ஊஞ்சலாடித் தாவி
கிளைகள்மாறி நடை போட்டு
தடங்கலற மேலே நகர்ந்தன
உச்சத்தில் குந்த
வாய்ப்பற்றவைகள்
உறுமல் மொழியோடு
சதா தாண்டிக் குதித்தன.
நம் மூலமென சிலாகித்தாலோ
குரல் கொடுத்தாலோ
அவைகளின் சேட்டைகள்
கூடிக்கொள்கிறது.
தெற்கைக் காட்டிலும்
வடக்கில்தான் இவைகளின்
நவகொட்டம் என்கின்றனர்.
உச்சாணிக் கொம்பிலிருந்து
வாலில் தீயேந்தி
கடல்தாண்டிக் குதித்த ஒன்று
பலிகளைப் பொசுக்கி
கொண்ட கோரத்தை
யுத்தக் காண்டமாய் வாசித்து
கண்கள் சிவந்ததுண்டு.
————————————-
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
- ஞயம் பட உரை
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ? (கட்டுரை 46 பாகம் 2)
- தீயடி நானுனக்கு
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)
- தாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3
- கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2
- [முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்
- கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1
- நகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்
- குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்
- வேத வனம் விருட்சம் 15
- தருணங்கள்..
- இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா? ஜனநாயக விரோதமா?
- இக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்
- ஒரு மாயவானம்
- “மும்பை மண்ணே வணக்கம்!”….
- தாழ்பாள்களின் அவசியம்
- பேரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்
- எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு
- உன் முகங்கள்
- கடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி
- ஞாநிக்கு ஒரு தீனி.
- கவிதைகள்
- “ஜடப்பொருளின் உரை”