நிலை

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

குட்டி செல்வன்


தொடர்ந்து பேசுவதற்கு
ஒன்றுமில்லையெனினும்
உனது மௌனம் தருகின்றது
தாங்க முடியாத வலிகளை

நீளும் நிசப்தமுடைத்து
இயல்பாகக் கேட்கின்றாய்
இந்நாட்களில் ஏன் எப்பொழுதும்
அமைதியாகவே இருக்கின்றாயென

உன்னிடம் பதிலென்று சொல்ல
ஏதுமிருப்பதில்லை

நிலையில்லாத‌ க‌ண்ணாடியில்
பிம்ப‌ங்க‌ள் ச‌ரியாக‌ விழுவ‌தில்லைதான்

சருகெனத் தூக்கி தூர வீசினாலும்
உன் கதவுகளைச் சட்டென்று மூடிவிட்டாலும்
திரும்ப உன் கால்சுற்றியே வருவேனென்றும்
உன்னைவிட்டால் எனக்கு உறவென்று
வேறு யவருமில்லை யெனவும்
உன் நம்பிக்கைகள் வலிதாக உருகியிருப்ப‌து
என் பிரியங்களால் மட்டுமே

எனக்கு தெரியும்
நீ பெற்றுக்கொள்ளத் தயங்கினாலும்
அதை ஒருபோதும் வெறுக்கமாட்டாயென

ஆயினும்
என‌த‌னுமான‌ங்க‌ள் தேய்ந்து
காணாமல் போகுமொரு தின‌த்தில்
என் கூட்டை உடைத்து
எங்கோ ப‌ற‌ந்துவிடப் போகிறேன்


kutty.selvan@live.com

Series Navigation

author

குட்டி செல்வன்

குட்டி செல்வன்

Similar Posts