வே பிச்சுமணி
இன்னொரு மழை நாளில்
உன் வருகை
தொடர் மழை
நாட்களுக்குப்பின்
இளம் சூரியன்
உன் பார்வை
என் மனஅழுக்கை
துவைத்து காயவைக்கும்
ஒளிக்கதிர்
உன் அருகாமை
துன்ப பாம்புகளை
மீண்டும் புத்துக்குள்
விரட்டும்
உனது வெப்பம்
நீ வாராததால்
சத்தமிட்ட தவளை
நண்பர்கள் கொட்டம்
அடங்கினர்
உன்னை பார்த்து
இன்னொரு
மழை நாளில்
மேககுடை பிடித்து வந்து
இடை இடையே
ஒளிமுகம் காட்டு
நடுசாமம்
யாருக்கோ திடீரென
சாமிவந்தது போல்
நடுசாமத்தில் விழிப்பு வந்தது
பின்னிரவு முழுவதும்
இருமல் காரனின்
இரவு போல் நீண்டது
மாந்திரிகன் குரளிக்கு விடாது
ஏவலிட வேன்டியது போல்
முன்னாள் நினைவுகள்
படுக்கையில் புரள வைத்தன
வெளியில் வந்து விண்நோக்கினால்
முற்றத்தில் இட்ட நட்சத்திர கோலங்கள்
நடுவீட்டுக்கு வந்திருந்தது
மனிதர்கள் நடமாட்டமில்லாததால்
தெருவிளக்குகள் வெளிச்சத்தை
தனது அடியெலயெ வட்டமிட்டது
தலைவன் கோஷத்திற்கு ஏற்ப
கோஷமிடம் தொண்டர்களாய்
ஒரு நாயினை தொடர்ந்து
பல நாய்கள் தொடர் ஓலமிட்டன
ஊரில் தனியே இருக்கும் அம்மாவின் நினைவு
அலுவலகத்தில் தேங்கியிருக்கும் கோப்புகள்
மகளின் நாளையே பரீட்சை என
வால்பிடித்து வந்த நிகழ்காலத்தை
தொடர்ந்து
மேய்ச்சலுக்கு சென்ற மாடு
தன்னாகவே வீடு வந்தது போல்
தூக்கம் வந்தது
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -6
- முடிவை நோக்கி !
- மீண்டும் நிலவைத் தேடிச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் ! (கட்டுரை : 4)
- கவிஞனின் மனைவி
- மொழியறியா மொழிபெயர்ப்பாளர்களும், விழிபிதுங்கும் தமிழர்களும்…………
- முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையின் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!
- நினைவுகளின் தடத்தில் (22)
- பற்றிப் படரும் பாரம்பரிய இசை விருட்சம்
- நிந்தவூர் ஷிப்லியின் ‘நிழல் தேடும் கால்கள்’
- அர்த்தம்
- இரண்டு கவிதைகள்
- மணிவிழா
- வி.பி. சிங் மறைந்தார்
- தமிழியல் ஆராய்ச்சிக்காக பனுவல் ஆய்விதழ்
- சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு
- “பாட்டிகளின் சிநேகிதன்” : நா.விஸ்வநாதனின் சிறுகதைத் தொகுப்பு
- இரண்டு கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினாறு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் -38 மாக்சிம் கார்க்கி.
- மினராவில் நட்சத்திரங்கள்
- அண்ணாவின் பெருமை
- வேத வனம் விருட்சம் 12 கவிதை
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!
- கடைசியாக
- நிலை
- தாகூரின் கீதங்கள் – 57 தொப்புள் கொடி அறுப்பு !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -12 << தீவில் கழித்த இரவுகள் ! >>
- கடவுளின் காலடிச் சத்தம் – 5 கவிதை சந்நிதி