டீன்கபூர் – இலங்கை
குண்டுமணிகளோடு சேர்ந்து எரிகிறது
மண்.
உன் கூந்தல்; இழைகள் பொசுங்கி மணக்கின்றன.
நீயும் உன் காதலும்
எனக்குள் எரிவதைப்போல.
உன் ஆத்மாவுக்கு யார்தான் கபனிட்டது..
உனக்காகவே எனக்குள்
பொழுது வணங்கியை வளர்த்துக்கொண்டிருக்கின்றேன்.
உன் கவிதைகளுக்குள்
நீ பற்றிய கால்களும்
நீ பற்றிய கைகளும்
மிகவும் சுவரஸ்யமாக எழுதப்படுகின்றன.
மண்
எனது பாதங்களையும் மணக்கச் செய்யும்
நான் சொறிந்து காயப்பட்ட நீயும் நானும்
வகுப்பறையில் உன்னை நான் சொறிந்துவிட்டேன்.
நீ அழுது கொண்டிருந்தாய்
உன் விழி வழியே ஒரு கங்கையை ஓடவிட்டிருந்தாய்
உன் உடையில் படிந்திருந்த
அழுக்குப் பற்றிப் பேசினேன்
அவை வாழைக் கசறு
தலையில் தடவும் எண்ணெய்
எனவும் கண்டேன்
அதைப் பற்றிப் பேசினேன்
அறிவுரைத்தேன்.
உன் நகத்தில் தேங்கிய ஊத்தை பற்றியும்
உன் பாடப்புத்தகங்களின் கிளிசல்களையும்
வினவியபோதே
உனக்கு நான் பயங்கரமாகத் தெரிந்தேன்.
நீ அழுதுகொண்டிருந்தாய்.
என்னிடம் நெருங்கிப்பேச தவறி நின்றாய்.
வாப்பாவின் மறு திருமணமும்
உம்மாவின் தனித்த அலைவும்
உன் கண்ணீருக்குள் அழிந்தபோதே
நானும் உன்போல் காயப்பட்டுவிட்டேன்.
எனது விலா எலும்பின் நீ
நீ எனது வளைந்த விலா எலும்பிலிருந்து
படைக்கப்பட்டிருக்கின்றாய்
அல்லாஹ் அதை ஆதாரப்படுத்துகின்றான்.
அந்த உண்மையே
எனது மன வானமெல்லாம்
நீ வானவில்லாக வளைந்து கிடக்கின்றாய்
எனப் பூரிக்கின்றேன்.
வானவில்லின் வளைவுக்குள்
சூரியனைப் பார்.
மிக மகிழ்வாகத் தெரிகிறது.
மிக அழகாகத் தெரிகிறது.
– டீன்கபூர் – இலங்கை
deengaffoor7@yahoo.com
- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- திண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று
- பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது
- தமிழ்நாடு திரைப்பட இயக்கமும் NFSCயும் இணைந்து வழங்கும் ரிட்விக் கடக் திரைப்பட விழா
- ALAMAK! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- தமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- 101-வது கவிமாலையில் நூல் வெளியீடு
- வடக்குவாசல் இணையதளம் வாரந்தோறும்
- வானியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு
- ஸ்ரீ தேவி காமாட்சி மந்திர் கும்பாபிஷேகம், நியூ தில்லி அறிவிப்பு
- தாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் !
- இயற்கையும் சில ஓவியங்களும்
- கடவுளின் காலடிச சத்தம் – 3 கவிதை சந்நிதி
- உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்
- மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு
- மெய்யுறு நிலை
- இன்றைய கணணி மனிதன்
- குட்டி செல்வன் கவிதைகள்
- ஒரு மழைக்குறிப்பு
- மேலமைன்
- புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- குழந்தைகள் விற்பனைக்கு
- நினைவுகளின் தடத்தில் – (21)
- திராவிடநாடு ? (திராவிட மாயை ?)
- அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.
- சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் 13
- எழுபது ரூபாய்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -3
- ஆன்மிகத் தேடலும் மந்திர நிகழ்வுகளும் – சில கவிதைகள்
- அவசரப்படும் வேசி
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்
- நாளைய உலகம்
- ‘புகை’ச்சல்
- காப்புறுதிக்கும் காப்புறுதி!
- வேத வனம் விருட்சம் 9
- கவன ஈர்ப்பு…#
- பண்ணி
- இரண்டாவது ஜனனம்
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை