தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
தூண்டிற் புழுவினைப் போல் – வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக – எனது
நெஞ்சம் துடித்ததடீ !
கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன் !
வேண்டும் பொருளை எல்லாம் – மனது
வெறுத்து விட்டதடீ !
பாரதியார் (கண்ணன் என் காதலன் !)
++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 30
பூதவிதழில் சிக்கிய தேனீ !
++++++++++++++++++++++++
பாதை முழுதும் புதுமை
பொங்கும்
காதலைப் பற்றி
என்ன சொல்வீர் தோழியரே ?
உன்னத மானவனுக்கு
உன் நேசத்தை அளிக்கும் போது
முதற் படியில்
சிதைந்து போவதுன் மேனி !
அடுத்துத் தயாராய் இரு
அவன் உன் சிரசில்
அமர்ந்து கொள்ள !
விளக்கொளியை வட்டமிடும்
விட்டில் பூச்சி போல்
தீயிக்கு இரையாகத்
தயாராகு !
வேட்டையில் வேடனிடம் ஓடி
மாட்டிக் கொள்ளும்
மானாய் வாழ்ந்திடு !
குள்ளப் பறவை
தீக் கங்குகளை விழுங்கும்
நிலவு மேல் கொண்ட
நேசத்துக் காக !
களிப்புடன் மடிவேன்
கடல் நீரை அருக முடியாத
மீனைப் போல் !
தேனீ போல் மாள்வேன்
இனிக்கும் பூவிதழ்கள் மூடிச்
சிக்கிக் கொண்டு !
தன்னைக் கோமகனுக்கு
தாரை வார்த்து
மீரா சொல்கிறாள் :
“ஒற்றைத் தாமரை என்னை
விழுங்கிக் கொள்ளும்
முழுமையாக !”
*****************************
(English Translation By : Jane Hirshfield )
*****************************
(தொடரும்)
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 27 2008)]
- காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ !
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- ஆவியை விட்டு விட்ட ஆ.வி.
- குழந்தையின் துயரம்
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- திருமணம்
- தாகூரின் கீதங்கள் – 42 முறிந்து போகும் காதல் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் உள்ளனவா ? – (கட்டுரை: 37)
- மீண்டும் சந்திப்போம்
- எச்சம்
- தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம்
- ஏலாதி இலக்கிய விருது 2008
- உயிர் எழுத்து – ஸ்ரீ சக்தி அறக்கட்டளை நடத்தும் கவிஞர் சக்தி ஜோதியின் ‘ நிலம் புகும் சொற்கள்’ கவிதைநூல் அறிமுக கூட்டம்
- ஒரு நிமிட ஆவணப்படம்
- கடிதம்
- இசாக்கின் “மௌனங்களின் நிழற்கொடை” வெளியீட்டு விழா
- நள்ளிரவின் அழைப்புகள், இதைத் தான் அறிவிக்கின்றன!
- நான்
- அருங்காட்சியகத்தில் நான்
- ச ம ர் ப் ப ண ம்
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- கவிதைக்கண் நூல் வெளியீடு விழா
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!
- பிளவுகள்
- “நீங்க இப்பொழுதே ஒரு நடமாடும் வியாபாரி (agent)”
- கனவில் வந்து பேசிய நபி
- வண்ணத்திப்பூச்சி
- சிறு கவிதைகள்
- குழந்தை
- ரேஷன் அரிசி
- புதுக்கவிதைகளில் பெண்ணியம்
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 30 விந்தன்
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 2
- வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் ” ஓடும்நதி ” படைப்புலகம்