கவிதா நோர்வே
திருமணம்
இரு கோல்கள் சங்கமிக்கும்
வழிமண்டலம்
இரு துருவங்கள் இணையும்
மையப்புள்ளி
வேற்றுகிரகத்து மனிதர்களாய்
முதல் சந்திப்பின்
ஆய்வுகள் இனிப்பதில்
அவசர இணைப்பு நடைபெறுகிறது
தன் உடமை காத்தல்
வாரிசு உறுதிப்படுத்தல்
கற்பென்ற பேரில் காப்புரிமை
ஆணுக்கும்
கலாச்சாரம் பேணல்
பண்பாடு ஊட்டல்
எனக்குமட்டும் என்ற நம்பிக்கை
பெண்ணுக்கும்
சொத்துக்கள் பெருக்கவும்
வாரிசு வளர்க்கவும்
நியமிக்கப்படும்
இரு அதிகாரிகளின்
குடும்ப ஸ்;தாபனம்
எப்பொழுதுமே
மேலதிகாரியாய் அமர்த்தப்படுகிறான்
அவன்
மரபுகளை முறித்துக்கொண்டு
துளிர்த்த காதலையே
சருகாக்கும் திருமணஸ்தாபனத்தில்
காதலைச் சொல்லுமா கல்யாணம்?
கல்யாண மேடையில்
எப்போதுமே ராஜா வேஷம்
அவனுக்கு
காதலும் வேஷம் போடுமிடத்து
இருவருமே கைதேர்ந்த நடிகர்கள்
ஒருவனுக்கு ஒருத்தியென்றது
கட்டாயப்படுத்தலாய் அமுழுக்கு வருகிறது
இரகசியத்தில் திருத்தியெழுதப்படுகிறது
பழைய தீர்ப்புகள்
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை
என்ற பொழுது
திருமணம் ஒரு நல்ல வழிதான்
இல்லையென்றால்
காதலுடன் வாழ
கல்யாணமெதற்காம்?
இருந்தும்
நிறுவப்படுகின்றன
புதிய புதிய நிறுவனங்கள்
பெரிசுகளின் வழிநடத்தலில்
பின்னே செல்ல
அத்தனையும் ஆட்டுமந்தைகள்
–
- காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ !
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- ஆவியை விட்டு விட்ட ஆ.வி.
- குழந்தையின் துயரம்
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- திருமணம்
- தாகூரின் கீதங்கள் – 42 முறிந்து போகும் காதல் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் உள்ளனவா ? – (கட்டுரை: 37)
- மீண்டும் சந்திப்போம்
- எச்சம்
- தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம்
- ஏலாதி இலக்கிய விருது 2008
- உயிர் எழுத்து – ஸ்ரீ சக்தி அறக்கட்டளை நடத்தும் கவிஞர் சக்தி ஜோதியின் ‘ நிலம் புகும் சொற்கள்’ கவிதைநூல் அறிமுக கூட்டம்
- ஒரு நிமிட ஆவணப்படம்
- கடிதம்
- இசாக்கின் “மௌனங்களின் நிழற்கொடை” வெளியீட்டு விழா
- நள்ளிரவின் அழைப்புகள், இதைத் தான் அறிவிக்கின்றன!
- நான்
- அருங்காட்சியகத்தில் நான்
- ச ம ர் ப் ப ண ம்
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- கவிதைக்கண் நூல் வெளியீடு விழா
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!
- பிளவுகள்
- “நீங்க இப்பொழுதே ஒரு நடமாடும் வியாபாரி (agent)”
- கனவில் வந்து பேசிய நபி
- வண்ணத்திப்பூச்சி
- சிறு கவிதைகள்
- குழந்தை
- ரேஷன் அரிசி
- புதுக்கவிதைகளில் பெண்ணியம்
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 30 விந்தன்
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 2
- வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் ” ஓடும்நதி ” படைப்புலகம்