நான்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

கண்டனூர் சசிக்குமார்



நான் நானாக இருந்தபோது
நலமாகவும் இருந்தேன்

என்வீட்டு மாங்காயை
எவனையோ பறிக்கவிட்டு
அடுத்தவீட்டு மாங்காயை – நான்
பறித்து அடிவாங்கி…….

அப்போதும்

இன்னும்பிற வெளியில்
வெக்கக் கேடுகள்
சொல்ல முடியா
நடந்த போதும்…….

நான் நானாக இருந்தேன்
நலமாகவும் இருந்தேன்

பிறகெப்போது

என்வீட்டுக் கண்ணாடி- எப்போது
என்னை அழகாகக்
காட்டியதோ அப்போது

நான் நானாகவும் இல்லை……!!!!
நலமாகவும் இல்லை……….!!!!


ஆக்கம்: கண்டனூர் சசிக்குமார்
pabsh123@yahoo.com

Series Navigation

author

கண்டனூர் சசிக்குமார்

கண்டனூர் சசிக்குமார்

Similar Posts