சித்தாந்தன்
விடை பெறுதலின் அவசரத்தில்
கைமறதியாய் எடுத்துவந்த
உனது மூக்குக்கண்ணாடி
சூனியமாய் கரைக்கிறது எனது பார்வையை
இன்றைய இரவை
உனது கண்களால் கடந்துகொண்டிருக்கிறேன்
இப்போது நீ என்ன செய்தவாறிருப்பாய்
சாய்மனைக்கட்டிலில் படுத்திருந்தபடியே
வால் குழைந்து கால்களை நக்கும்
நாய்க்குட்டியின் மென்முதுகு தடவ
எத்தணித்து தோற்றபடியிருப்பாயா
செல்லமகளின் குறும்புத்தனங்களை
ரசிக்கமுடியாப் பொழுதுகளை நொந்து கொள்வாயா
தூக்கத்தின் இருட்டுக்கும்
பொழுதின் இருளுக்கும்
வித்தியாசம் புரியாமல் குழம்பிக்கிடக்கிறேன்
குழந்தையின் கன்னங்களில்
இடவேண்டிய முத்தங்கள் இடந்தவறுகின்றன
இருட்டுடன் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது
இரவுபற்றிய அற்புத வார்த்தைகள் சிதைகின்றன
ஒளிநிரம்பிய அறையிலிருந்துகொண்டு
புத்தகத்தின் கரியபக்கங்களை வாசிக்கிறேன்
சூரியன் புலரும் திசையறியாது
கைகளால் சுவர் தடவி
ஒலிகளை மோந்து கால்கள் இடறுகிறேன்
கைத்தடியில்லாத இந்த இரவுக்கு
தெருக்களுமில்லை
நண்ப,
இளவொளி சிதறும் காலைக்காக
காத்திருக்கிறேன்
உனது பார்வையை உன்னிடந் தந்துவிட்டு
எனது பகலை என்னிடமிருந்து பெறுவதற்கு
[ரமேஸிற்கு] 22.09.2007
deebachelvan@gmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் ! (கட்டுரை: 35)
- தாகூரின் கீதங்கள் – 40 யாருடைய தவறு அது ?
- காற்றினிலே வரும் கீதங்கள் – 28 கண்ணன் என் அரசன் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 16 (சுருக்கப் பட்டது)
- பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு
- ஊடுருவிப் பார்க்கும் கண்கள்
- திவசம் @ டோம்பிவிலி – அவுட்சோர்ஸிங் (Outsourcing)
- நினையாத நினைவு
- என்றான், அவன்!
- இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் !!
- அவுஸ்திரேலியாவில் எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழா
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28 மாப்பசான்
- இன்னும் கொஞ்சம்…!
- நூல்வெளியீடு “பிரம்மா”
- கோவையில் மதுவுக்கு எதிரான மக்கள் இயக்கம்
- 27-வது பெண்கள் சந்திப்பு , கனடா
- In Memory of Sri Lanka’s Black July
- கவிதை௧ள்
- மதங்களின் பெயரால்
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- எல்லாம் கடவுள் செயல்
- யாதும் ஊரே
- அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது
- இந்தக் கடிதத்தில் முகவரி இல்லை
- பிரகிருதி
- அறியாமல் பிழை செய்யும் அவர்களை…அரவாணிகளே… மன்னித்து விடுங்கள்…!
- நினைவுகளின் தடத்தில் – 14
- வாழ்வியல்: ஃபஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்!!
- நலந்தானா அண்ணா?: பாட்டால் நலம் விசாரித்த கண்ணதாசன்
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- சொல்ல வேண்டிய சில… 1
- கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி
- இரயில் நிலையப் பெஞ்சு
- தமிழுக்கு தமிழ் என்றே பெயர்
- அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்
- குர்சி (நாற்காலி)