செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
என் …!
பெரும் மமதைக்காரனென்று சொல்.
பித்தலாட்டக்காரன் என்று சொல்.
சிற்றின்பப்பிரியன் என்று சொல்.
சின்னபுத்திக்காரன் என்று சொல்.
சீதாராமன் இல்லை என்று சொல்.
சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.
மதுபுகைக்கு அடிமை என்று சொல்.
மனிதனே இல்லை என்று சொல்.
என்னை
என்ன வேண்டுமானாலும்
சொல்.
என் கவிதைகளும்
என் போல்தானா?
சொல்.
இயல்பு…!
என்னாயிற்று என்றேன்.
எதுவுமில்லை என்றாய்.
பின் எதையும்
கேட்கவில்லை நான்.
இயல்பின்றி போவதில்
சம்மதமில்லை எனக்கும்.
இருப்பு…!
எப்படி இருக்கிறாய் என்றாய்.
அப்படியேதான் இருக்கிறேன்
என்றேன்.
இப்படி உன் விழிகள் விரிய
அப்படியே இருத்தலென்பது
அத்தனை சிரமமா என்ன?
பிரிவின் சாசனம்…!
ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்?
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.
பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.
இன்முகம்…!
எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்
இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்.
கண்டதும் காணாததும்…!
சிக்னலில் கடந்து போன
பெண்ணின்
முகம் உருவம் எல்லாம்
மறந்துபோய்
சாலையைத் துடைத்தபடியே போன
அவளின்
சிவப்பு நிற துப்பட்டா மட்டும்
துல்லியமாய் கண்முன் இன்னமும்.
எப்படிக் கொண்டு சேர்க்க?
காலையில் வீதியில் கண்ட
அந்த ஒற்றைச்சாவியை
அதற்கு உரியவனிடம்.
மனக்குழந்தை…!
இடுப்பை விட்டு
இறங்க மறுத்து
அடம்பிடிக்கும்
குழந்தையாய்
எப்போதும்
எதையாவது
எழுதச் சொல்லி
நச்சரித்துக்கொண்டிருக்கிறது
என்
மனக்குழந்தை.
சொல்லுதல்…..!
சிலதை
சொல்லத் தெரியவில்லை.
சிலதை
சொல்வதா தெரியவில்லை.
சிலதை
சொல்வதற்கில்லை.
சிலதை
சொல்லித் தெரிவதில்லை.
சிலதை
சொல்லாமல் இருக்க முடிவதில்லை.
சிலதை
சொல்லி ஒன்றும் ஆவதில்லை.
சிலதை
சொல்வதால் பெரும் தொல்லை.
இப்படிப் போகும்
சிலதை
எப்படி முடிக்க
என்றும் தெரியவில்லை.
ஹைக்கூ
அறுநூறு மைல் வேகத்திலும்
ஆழ்ந்த உறக்கம்.
விமானப் பயணம்.
SJEGADHE@tebodinme.ae
- துய்ப்பேம் எனினே தப்புந பலவே – வாழ்க்கை இதுதான்!
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(2) (முற்றும்)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !
- தாகூரின் கீதங்கள் – 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 13 (சுருக்கப் பட்டது)
- திருமதி. “ரத்திகா” அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிய அகில நாண்கள் (Cosmic Strings) (கட்டுரை: 32)
- மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!
- அபார்ட்மெண்ட் அட்டகாசம்!!!
- கவிதைகள்
- Last kilo byte – 18 மும்பை அரங்குகளில் தமிழ்படங்களும், முகங்களும்
- உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா
- Launching of Creative Foundation
- சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் – நரேந்திரன் கட்டுரை
- பைரவர்களின் ராஜ்ஜியம்!
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம்
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்
- தழல் ததும்பும் கோப்பை
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(1)
- மானுடத்தைக் கவிபாடி…
- தூக்கத்தோடு சண்டை
- தன்னுடலை பிளந்து தந்தவள்
- நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்