இழப்பு

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

கவிதா நோர்வே


எனக்குத் தெரியும்

எம் மண்ணில்

வசந்தம் ஒருநாள்

மலருமென்று

இழப்புகளை ஒருநாள்

இழப்போம் என்று

அன்று

அழிந்த வீதியெல்லாம்

தோரணங்கள் கட்டப்படும்

என் இடிந்த வீட்டை

மாமா புதுபித்துத் தருவார்

பூஞ்செடிகளில் பூக்கள்

புத்துயிர் பெறும்

என் பழைய சினேகிதர்கள்

மீண்டும்

அறிமுகமாவார்கள்.

இருள் மறையும்

என் அம்மா வருவாள்

என் மாமன், மாமி

வருவார்கள்.

மடித்துக் கட்டிய

அழுக்கு வேட்டியுடன்

என் தாத்தா வருவார்.

என் மச்சான் வருவான்

தேசத்திற்காய் உயிர் நீத்தவர்கள்

என்ற மாவீரர் பட்டியலில்

என் அப்பாவும்

வருவார்.

-கவிதா நோர்வே

Series Navigation

author

கவிதா நோர்வே

கவிதா நோர்வே

Similar Posts