கவிதா நோர்வே
என்னிடம் பெண்மையில்லை
மன்னித்துவிடுங்கள்!
வளையல் குலுங்க
கொழுசொலியுடன் வளையவரும்
பெண்மை
காலை முழுகி
குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும்
பெண்மை
நாற்சுவரில் தூசிதட்டி
நல்ல பெயர்வாங்க
முடியவில்லை என்னால்
கண்முடி நின்று
கணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும்
பிரார்திக்க விருப்பமில்லை எனக்கு
அதற்கும் மேல
சிந்திக்க முடிகிறது என்னால்…
சமுகத்தின் வக்கிர வார்த்தைகளை
வெல்ல
மொழியும் வழியும்
புரிந்து போனதில்
மௌணித்திருக்க மறுக்கிறது
அது தாயோ
என்னை தனதாக்கிக் கொண்டவனோ
தொங்கப்போடும் தாலியில்
எனது கண்ணியத்தையும்
பெண்மையையும் நிரூபிக்க
இஸ்டமில்லை
நிமிர்ந்தே நடக்கிறேன்.
எந்த ஆணிடமும்
சிரித்து பேச முடிகிறது என்னால்
அவர்களையும் மனிதர்களாகத்தான்
பார்க்க முடிகிறது
மன்னித்து விடுங்கள்.
தாய்மை என்ற பாத்திரத்தில்
விழுவதில் பலதும்
எதிர்பாலி;ன்
சோம்பேறித்தனமும்
சொற்பத்தனமும் என்பது
தெரிந்த பின்
எழுதுகிறேன்.
உங்களின் சுகத்திற்காய்
எமக்களித்த பட்டம்
தாய்மை
வெட்கத்தின் வரைமுறை
தெரியவில்லை எனக்கு
அடக்கம் என்பதன் பொருள்
வித்தியாசமாயிருக்கிறது
எனது அகராதியில்
பொறுமை என்பதன்
அளவுகோல்
அவர்களதும் எனதும்
ஒரே அளவில் இல்லை
மரபுகளை முறித்துக்கொண்டு
மனிதனாக இருக்கச் சொல்கிறது
எனது சுயம்
நீங்கள் நினைக்கும் பெண்மை
என்னிடம் இல்லை.
மன்னித்துவிடுங்கள்!
– கவிதா நோர்வே
kavithai1@hotmail.com
- ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி
- உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்
- நினைவுகளின் தடத்தில் – (10)
- செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7
- அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !
- கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?
- ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)
- மரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”
- அம்மாவின் ஆசை
- அவனுக்கு நீங்களென்று பெயர்
- உங்கள் சாய்ஸ்
- பரிவிற் பிறந்த இலக்கியம்
- கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)
- தனித் தமிழ்
- மனவெளியின் மறுபக்கம்
- இலக்கியச் சந்திப்பு
- காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது
- நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு
- கடிதம்
- என்னை மட்டும்.. ..
- ஈஸ்வர அல்லா தேரே நாம்
- ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா
- 35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.
- தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
- ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13
- அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்
- அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி
- ஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்
- Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச
- ‘தொராண்டோ’வின் இரவுப் பொழுதொன்றில்….
- பெண்மை விலங்கில்
- மரம் தாவும் சிலந்திகள்
- கவிதைகள்
- முன்கர்நகீர் என் தோழர்
- பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்
- மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்
- த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி
- கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை