தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இங்கிதனால் யானும்
இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான்,
“இடைச்சாதி நான்” என்றான்.
“மாடு கன்று மேய்த்திடுவேன் !
மக்களை நான் காத்திடுவேன்.
வீடு பெருக்கி
விளக்கேற்றி வைத்திடுவேன். . . . .
காதல் பெரிதெனக்கு !
காசு பெரிதில்லை !” . . . .
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்
வண்ணமுறக் காக்கின்றான். . . .
எங்கிருந்தோ வந்தான் !
இடைச்சாதி என்று சொன்னான் !
இங்கிவனை யான்பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் !
பாரதியார் (கண்ணன் என் காவலன்)
காற்றினிலே வரும் கீதங்கள் – 20
ஏழையின் காதலன் !
பாலைவனக் குடிவாசி
படிப்பறி வில்லாதவள் !
பற்களில்
கடித்த மாங்கனி
இனித்தது !
பழக்க வழக்கம்
மிக்க மோசம் ! கீழினத்தவள் !
அழுக்கு மேனி !
ஒழுக்க மில்லாதவள் ! அவள் தின்ற
எச்சிற் கனியை
எடுத்துச் சுவைத்தான்
கோமகன் !
ஏனெனில் நேசிக்கத் தெரிந்தவள்
அந்தக் குடிவாசி !
பகட்டு வாழ்வுக்கும்
பட்டிப் புழுதிக்கும்
முரண் அறியாத அப்பாவி !
வேதம் அறியாதவள் ! ஆயினும்
காதல் அமுதைச் சுவைத்தவள் !
இரதம் தூக்கிச் செல்லும்
அந்தக் குமரியை ! இப்போது
சொர்க்கத்தில் உள்ளாள் இறைவன்
பக்கத்தில்
பேரின்பக் கடலில் மூழ்கி !
ஏழையின் கோமகன்
இரக்கப் படுவான் யார் மீதும் !
மீரா சொல்கிறாள்:
அவளும் தான்
இடையர் குலப் பெண்ணாய்
உதித்தவள்
முன்னைப் பிறப்பில் !
+++++++++
(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)
(தொடரும்)
************
Holy Fire
(A Collection of English Poems)
(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994
Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers
1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.
2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 18, 2008)]
- பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6
- அதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்
- லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.
- ” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் !
- தாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)
- புரண்டு படுத்த அன்னை
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்
- தெய்வ மரணம் – 2
- National Folklore Support Centre announces Sir Dorabji Tata Fellowships For North Eastern India
- அன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”
- கடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்
- உள்ளூர் கோயபல்ஸ்கள்!
- அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!
- கடிதம்
- மலர் மன்னனுக்கு பதில்!
- திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி
- முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை
- மலர்மன்னன்
- கடிதம்
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு
- ‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி
- போதி மரம்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12
- மனிதம் நசுங்கிய தெரு !
- மீட்சி
- தேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)
- மும்பை விசிட்-சில தகவல்கள்
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2
- தனிமை
- செப்புவோம் இவ்வன்னை சீர்
- தாஜ் கவிதைகள்
- வானம்
- துவம்சம்” அல்லது நினைவறா நாள்
- நீளக்கூந்தல்கா¡¢யின் அழகானச் செருப்பு
- உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்
- எவ்வித ஆதாரமும் சொல்லாமல்